பதிவு செய்த நாள்
27 ஆக2018
23:23
ஈரோடு : ‘‘ரேயான் நுால் விலையை, மாதம் ஒரு முறை மட்டுமே உயர்த்த வேண்டும்,’’ என, ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர், சுரேஷ் கூறினார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: முன்பு, பருத்தி விலை உயர்வு, ரேயானுக்கான மூலப்பொருள் விலை உயர்வின்போது மட்டும், மூன்று முதல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரேயான் நுால் விலையை உயர்த்துவர். தற்போது, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உயர்த்துகின்றனர். இதனால், ஆர்டரை முடித்துக் கொடுக்கும் முன், விலை உயர்ந்து, நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
கடந்த, ௧௦ல், 1 கிலோ, 202 ரூபாயாக இருந்து, இரண்டு நாட்களுக்கு முன், 224 ரூபாயாகி விட்டது. கடந்த, 15 நாளில், 22 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போதைய விலை உயர்வுப்படி, 1 மீட்டர் துணியின் விலை, மூன்று முதல், 3.50 ரூபாய் வரை உயர்ந்திருக்க வேண்டும். இது தவிர, 15 சதவீத, ஜி.எஸ்.டி.,யும் உள்ளதால், தொழில் நஷ்டம் ஏற்படுகிறது.
மத்திய – மாநில அரசுகள், தொழில் நலிவதை கணக்கில் கொண்டு, மாதம் ஒரு முறை, குறிப்பிட்ட நாளில், நுால் மற்றும் ரேயான் நுால் விலையை உயர்த்தும் முறையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|