பதிவு செய்த நாள்
27 ஆக2018
23:24
புதுடில்லி : உலகின் மூன்றாவது பெரும் பணக்காரரான, வாரன் பபட், ‘பேடிஎம்’ நிறுவனத்தில் முதலீடு மேற்கொள்ள உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாரன் பபட்டின், ‘பெர்க் ஷையர் இந்தியா’ நிறுவனம், 2011ல், ‘பஜாஜ் அலையன்ஸ்’ உடன் இணைந்து, காப்பீட்டு துறையில் களமிறங்கியது; இரண்டு ஆண்டுகளுக்கு பின், வர்த்தகத்தை விட்டு வெளியேறியது. இந்நிலையில், வாரன் பபட், மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அவர், மொபைல் போன் மூலம் பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும், பேடிஎம் நிறுவனத்தில், 2,500 கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இது, இந்திய, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில், வாரன் பபட்டின், ‘பெர்க் ஷையர் ஹாத்வே’ நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முதலீடாக இருக்கும்.
இந்தியாவில், இணைய தொடர்பு, பயன்பாடு, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் பெருகி வருவதால், வாரன் பபட், பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சேகர் சர்மா, 2000ல், ‘ஒன்97’ நிறுவனத்தின் கீழ், பேடிஎம் சேவையை துவக்கினார். தற்போது, மாதம், 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்நிறுவனத்தில், ஜப்பானின், ‘சாப்ட் பேங்க்’ மற்றும் சீனாவின், ‘அலிபாபா’ உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|