பதிவு செய்த நாள்
27 ஆக2018
23:26
புதுடில்லி : ஜி.எஸ்.டி.,யால் பெறும் உள்ளீட்டு வரிப் பயனை, மக்களுக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, புகார் தெரிவிக்க, உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையமான – என்.ஏ.ஏ., அதன் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பெரும்பான்மையான பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பின் ஆதாயத்தை, சரக்கு மற்றும் சேவையை பெறும் நுகர்வோருக்கு, நிறுவனங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு, ஜி.எஸ்.டி., யில் பெற்ற, உள்ளீட்டு வரிப் பயனை வழங்காமல், பழைய விலையிலேயே சரக்கு மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து, புகார் தெரிவிக்கலாம்.
இதற்காக, உதவி மைய சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, 011 – 21400643 என்ற தொலைபேசி எண்ணில், அனைத்து வேலை நாட்களிலும், காலை, 9:30 – மாலை 6:00 மணி வரை தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம். வலைதளத்தில், புகார் தொடர்பான ஆதாரங்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நுகர்பொருட்கள் அட்டையில், ஏற்கனவே அதிகபட்ச சில்லரை விலை அச்சிடப்பட்டிருந்தால், அதன் அருகே, குறைக்கப்பட்ட விலை உள்ள, ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வேண்டும் என, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|