பதிவு செய்த நாள்
27 ஆக2018
23:28
மும்பை : வங்கிகளுக்கு, மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடனை வசூலிக்க, விதித்த, ‘கெடு’ மேலும், 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய, 3.80 லட்சம் கோடி ரூபாய் கடனை, 70 – 80 நிறுவனங்கள் செலுத்தாமல் உள்ளன. இக்கடன்களை, 180 நாட்களுக்குள் வசூலிக்குமாறும், தவறினால், திவால் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும், ரிசர்வ் வங்கி, பிப்., 12ல் வங்கிகளுக்கு அறிக்கை அனுப்பியது. இந்தக் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இந்நிறுவனங்கள் மீது, திவால் நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல வங்கிகள், வாராக் கடன் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, தீவிரமாக முயற்சித்து வருவதால், ரிசர்வ் வங்கி, கெடு காலத்தை, மேலும், 15 நாட்களுக்கு நீட்டித்து உள்ளது.
இது குறித்து, வங்கி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அளித்துள்ள அவகாசத்திற்குள், சில வங்கிகள், கடன் தீர்வு திட்டங்களை அளிக்கும் என, தெரிகிறது. எனினும், பெரும்பான்மையான நிறுவனங்கள், திவால் நடவடிக்கைக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. மின் துறையில் தான், அதிகபட்சமாக, 34 நிறுவனங்களிடம், 1.50 லட்சம் கோடி வாராக் கடன் வசூலிக்க வேண்டியுள்ளது. அவை, திவால் நடவடிக்கைக்கு உள்ளானால், வங்கிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்படும். ஏற்கனவே, 18 நிறுவனங்களின் மனுக்கள், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, ஜி.எம்.ஆர்., – சத்தீஸ்கர், இந்த் – பாரத் எனர்ஜி, லான்கோ அன்பரா, ஜிந்தால் இந்தியா தெர்மல் பவர் ஆகிய நிறுவனங்களும் திவால் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஏழு மின் நிறுவனங்களின் வாராக் கடன்களுக்கு தீர்வு காண்பதில், இறுதிக் கட்டத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|