வங்கிகளின் வாராக் கடன் வசூலிப்பு, ‘கெடு’ நீட்டிப்புவங்கிகளின் வாராக் கடன் வசூலிப்பு, ‘கெடு’ நீட்டிப்பு ... பட்டுநுால் நுாற்பு இயந்திரத்துக்கு நிதி; மத்திய பட்டு வாரிய நடவடிக்கையால் மகிழ்ச்சி பட்டுநுால் நுாற்பு இயந்திரத்துக்கு நிதி; மத்திய பட்டு வாரிய ... ...
புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்; சாதனை படைத்த, ‘சென்செக்ஸ், நிப்டி’ குறியீடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2018
23:29

மும்பை : நேற்று, இந்­திய பங்­குச் சந்­தை­கள் புதிய உச்­சத்தை எட்­டின. மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­க­ளின், ‘சென்­செக்ஸ், நிப்டி’ குறி­யீ­டு­கள், வர­லாற்­றில் இல்­லாத அள­விற்கு, உயர்­வைக் கண்­டன.

கடந்த வாரம், இறுதி வர்த்­தக நாளன்று, அமெ­ரிக்க மத்­திய வங்கி தலை­வர், ஜெரோம் போவல், ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டார். ‘‘அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, வேலை­வாய்ப்பு உயர்வு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில், வங்கி வட்டி விகி­தம் படிப்­ப­டி­யாக உயர்த்­தப்­படும்,’’ என, அவர் கூறி­னார். இதன் கார­ண­மாக, அன்று, அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­கள் சிறப்­பான ஏற்­றத்­து­டன் முடி­வ­டைந்­தன.

ஆசியா :
அதன் தாக்­கம், இவ்­வார வர்த்­த­கத்­தின் முதல் நாளான நேற்று, ஆசியா, ஐரோப்பா உள்­ளிட்ட சர்­வ­தேச பங்­குச் சந்­தை­களில் எதி­ரொ­லித்­தது. இந்­நி­லை­யில், சீன மத்­திய வங்கி, ‘அன்­னி­யச்செலா­வணி சந்­தையை ஸ்தி­ரப்­ப­டுத்த, புதிய முறை­யில், தின­மும் யுவான் கரன்சி மதிப்­பீடு செய்­யப்­படும்’ என, அறி­வித்­தது. இத்­து­டன், உள்­நாட்டு நிதி நிறு­வ­னங்­களும், அன்­னிய நிதி நிர்­வாக நிறு­வ­னங்­களும், போட்டி போட்டு பங்­கு­களை வாங்­கி­ய­தால், இந்­திய பங்­குச் சந்­தை­கள் ஏற்­றம் கண்­டன.

ரியல் எஸ்­டேட் தவிர்த்து, வங்கி, மின்­சா­ரம், உலோ­கம் உள்­ளிட்ட அனைத்து துறை­க­ளைச் சார்ந்த நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள், விலை உயர்­வு­டன் கைமா­றின. இத­னால், மும்பை பங்­குச் சந்­தை­யின் சென்­செக்ஸ் குறி­யீடு, 442 புள்­ளி­கள் உயர்ந்து, முதன் முறை­யாக, 38694.11 புள்­ளி­களை எட்­டி­யது. தேசிய பங்­குச் சந்­தை­யின் நிப்டி குறி­யீடு, 134.85 புள்­ளி­கள் அதி­க­ரித்து, 11691.95 என்ற புதிய உச்­சத்தை தொட்­டது. கடந்த ஐந்து மாதங்­க­ளுக்கு பின், இரு குறி­யீ­டு­களும், ஒரே நாளில் அதி­க­பட்ச உயர்­வைக் கண்­டன. இதற்கு முன், ஏப்., 5ல், சென்­செக்ஸ் அதி­க­பட்­சம், 577.73 புள்­ளி­கள்; நிப்டி, 196.75 புள்­ளி­கள் என்ற அள­வில் உயர்­வைக் கண்­டி­ருந்­தன.

வளர்ச்சி :
நேற்று, வர்த்­த­கத்­தின் இடையே, சென்­செக்ஸ், 38736.88 புள்­ளி­கள் வரை அதி­க­ரித்­தது. கடந்த, 23ல், 38487.63 புள்­ளி­களை எட்­டி­யதே சாத­னை­யாக இருந்­தது. அது­போல, நிப்டி, வர்த்­த­கத்­தின் நடுவே, முதன் முறை­யாக, 11700ஐ தாண்டி, 11700.95 புள்­ளி­கள் என்ற புதிய உச்­சத்தை எட்­டி­யது. இது, கடந்த, 23ல், அதி­க­பட்­சம், 11620.70 புள்­ளி­க­ளாக உயர்ந்­தி­ருந்­தது. உள்­நாட்­டில், பொரு­ளா­தார வளர்ச்சி அறி­கு­றி­கள், பர­வ­லான பருவ மழை, உணவு தானிய உற்­பத்தி குறித்த சாத­க­மான மதிப்­பீ­டு­கள் போன்­ற­வற்­றால், பங்­கு­களில் முத­லீடு செய்­வது அதி­க­ரித்து வரு­கிறது.

உள்­நாடு – வெளி­நாடு :
கடந்த வாரம், 24ம் தேதி, இறு­தி­யாக நடை­பெற்ற பங்கு வர்த்­த­கத்­தில், உள்­நாட்டு நிதி நிறு­வ­னங்­கள், அதிக அள­வில், பல்­வேறு துறை­க­ளைச் சார்ந்த நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­களை வாங்­கின. அன்று, உள்­நாட்டு நிதி நிறு­வ­னங்­கள், 905 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்­கு­களை வாங்­கி­ய­தாக, பங்­குச் சந்தை வெளி­யிட்­டுள்ள தற்­கா­லிக புள்­ளி­வி­ப­ரம் தெரி­விக்­கிறது. அதே­நா­ளில், வெளி­நாட்டு நிதி நிர்­வாக நிறு­வ­னங்­கள், நிகர அள­வில், 76 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்கு முத­லீ­டு­களை திரும்­பப் பெற்­றுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)