பதிவு செய்த நாள்
28 ஆக2018
23:18
புதுடில்லி : மத்திய அரசு, முதன் முறையாக, ‘பாரத்மாலா கடன் பத்திரங்கள்’ வெளியிட்டு, 3,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது: நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, அடிப்படை கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு, 70 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதில், முதற்கட்டமாக, அக்டோபரில் வெளியிட உள்ள, பாரத்மாலா கடன் பத்திரங்கள் மூலம், 3,000 கோடி ரூபாய் திரட்டப்படும். இதற்கான முதலீடுகளை திரட்ட, அமெரிக்கா செல்ல உள்ளேன். உள்நாட்டில், சாதாரண மனிதர்களும், இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, அதன் மூலம், நெடுஞ்சாலை திட்டங்களில் பங்கு கொள்ளவே அதிகம் விரும்புகிறேன்.
மக்கள், ஓய்வு கால தேவைகளுக்கு, ஆண்டுக்கு, 6 சதவீத வட்டியில், வங்கியில், ‘டிபாசிட்’ செய்கின்றனர். அதை விட, 2.5 சதவீதம் கூடுதலாக, 8.5 சதவீத வட்டியை, பாரத்மாலா கடன் பத்திரம் வழங்கும். ஐந்து ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் வட்டி வருவாய் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பாரத்மாலா திட்டத்தில், 2022 மார்ச்சுக்குள், 83 ஆயிரம் கி.மீ., நெடுஞ்சாலைகள் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|