பதிவு செய்த நாள்
28 ஆக2018
23:25
எளிமைப்படுத்தப்பட்ட, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவத்துக்கு, தொழில் துறையினரிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாக, வணிக வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள பிரதான தொழில் துறை சங்கங்களின் நிறை, குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக, 2015ம் ஆண்டு, ‘விற்பனை வரி ஆலோசனைக் குழு’ தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு தொழில் துறை சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது: விற்பனை வரி ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், பல்வேறு விஷயங்கள் விவாதித்தாலும், எளிமைப்படுத்தப்பட்ட, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவம் குறித்து, அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
நிறுவனங்களின் கருத்துகளைக் கேட்பதற்காக, வரைவு படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிவம் ஏற்புடையதாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|