எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவத்துக்கு வரவேற்புஎளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் படிவத்துக்கு வரவேற்பு ... சீனாவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்; அமெரிக்காவின் இழப்பு; இந்தியாவுக்கு வாய்ப்பு சீனாவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்; அமெரிக்காவின் இழப்பு; ... ...
கடனை திரும்ப தராத மின் நிறுவனங்களுக்கு, ‘ஷாக்’; திவால் நடவடிக்கையில் வங்கிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2018
23:35

மும்பை : வாராக் கடன் தொடர்­பாக, மின் துறை­யைச் சேர்ந்த பல நிறு­வ­னங்­கள் மீது, திவால் நட­வ­டிக்கை எடுக்க, வங்­கி­கள் ஆயத்­த­மாகி வரு­கின்­றன.

பொதுத் துறை வங்­கி­களில் வாங்­கிய, 3.80 லட்­சம் கோடி ரூபாய் கடனை, 70 – 80 நிறு­வ­னங்­கள் செலுத்­தா­மல் உள்­ளன.

அவகாசம் :
இக்­க­டன்­களை, 180 நாட்­க­ளுக்­குள் வசூ­லிக்­கு­மா­றும், தவ­றி­னால், திவால் நட­வ­டிக்கை எடுக்­கு­மா­றும், பிப்., 12ல், அனைத்து வங்­கி­க­ளுக்­கும், ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்­பி­யது. இந்த, 180 நாள், ‘கெடு’ நேற்று முன்­தி­னம் முடி­வ­டைந்­தது. இதை­ய­டுத்து, வாராக் கடன் தொடர்­பான சம­ரச தீர்வு, சட்ட நட­வ­டிக்கை உள்­ளிட்­ட­வற்றை மேற்­கொள்ள வச­தி­யாக, வங்­கி­க­ளுக்கு, 15 நாட்­கள் அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­குள், வழக்­க­றி­ஞர்­கள், வல்­லு­னர்­கள் ஆகி­யோரை அமர்த்தி, கடன் தீர்வு திட்­டங்­களை, ரிசர்வ் வங்­கி­யி­டம் அளிக்­கும் நட­வ­டிக்­கை­யில், வங்­கி­கள் ஈடு­பட்­டுள்­ளன. எனி­னும், தலா, 2,000 கோடிக்­கும் அதி­க­மான கடனை செலுத்­தா­மல் உள்ள, 40 நிறு­வ­னங்­கள், திவால் நட­வ­டிக்­கைக்கு ஆளா­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எஸ்.பி.ஐ., :
மின் துறை­யில் தான், அதி­க­பட்­ச­மாக, 34 நிறு­வ­னங்­க­ளி­டம், 1.50 லட்­சம் கோடி ரூபாய் வாராக் கடன் வசூ­லிக்க வேண்­டி­யுள்­ளது. அவற்­றில், 18 நிறு­வ­னங்­க­ளின் மனுக்­கள், தேசிய நிறு­வன சட்ட தீர்ப்­பா­யத்­தில் ஏற்­க­னவே தாக்­கல் செய்­யப்­பட்­டு உள்­ளன.

தற்­போது, ‘ஜிந்­தால் இந்­தியா தெர்­மல் பவர், லான்கோ அன்­பரா, ஜி.எம்.ஆர்., – சத்தீஸ்­கர், இந்த் – பாரத் எனர்ஜி’ ஆகிய நிறு­வ­னங்­களும் திவால் நட­வ­டிக்­கைக்கு தப்­பாது என, தெரி­கிறது. ‘கே.எஸ்.கே.மகா­நதி, ஜே.பி., பவர் வெஞ்சர், கோஸ்­டல் எனர்­ஜென்’ உட்­பட, ஏழு மின் நிறு­வ­னங்­க­ளின் வாராக் கடன்­க­ளுக்கு, கோர்ட்­டுக்கு வெளியே தீர்வு காணும் முயற்சி இறு­திக் கட்­டத்தை எட்­டி­யுள்­ள­தாக, எஸ்.பி.ஐ., தெரி­வித்­து உள்­ளது.

இன்று விசா­ரணை :
வாராக் கடன் தொடர்­பாக, ரிசர்வ் வங்கி பிறப்­பித்த உத்­த­ரவை எதிர்த்து, 14 நிறு­வ­னங்­கள், நீதி­மன்­றங்­களில் வழக்கு தொடுத்­துள்­ளன. அவற்றை ஒன்­றாக விசா­ரிக்க வேண்­டும் என, ரிசர்வ் வங்கி தாக்­கல் செய்த மனு, இன்று சுப்­ரீம் கோர்ட்­டில் விசா­ர­ணைக்கு வர உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)