கடனை திரும்ப தராத மின் நிறுவனங்களுக்கு, ‘ஷாக்’; திவால் நடவடிக்கையில் வங்கிகள் தீவிரம்கடனை திரும்ப தராத மின் நிறுவனங்களுக்கு, ‘ஷாக்’; திவால் நடவடிக்கையில் ... ... ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு ...
சீனாவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்; அமெரிக்காவின் இழப்பு; இந்தியாவுக்கு வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2018
23:44

புதுடில்லி : வர்த்­த­கப் போர் கார­ண­மாக, சீனா­விற்­கான அமெ­ரிக்­கா­வின் ஏற்­று­மதி குறை­யும் சூழலை பயன்­ப­டுத்தி, சீனா­விற்­கான ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, இந்­தியா திட்­ட­மிட்­டுள்­ளது.

சீனா­வின், 3.50 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு, அமெ­ரிக்கா, இரு கட்­டங்­க­ளாக வரியை உயர்த்­தி­யுள்­ளது. இதற்கு பதி­ல­டி­யாக, இதே அள­விற்கு, அமெ­ரிக்­கா­வின் இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு, சீனா­வும் அதிக வரி விதித்­துள்­ளது. இந்த வகை­யில், இரு நாடு­களும், பரஸ்­பர இறக்­கு­மதி வரியை, 25 சத­வீ­தம் உயர்த்­தி­யுள்­ளன.

தோல்வி :
இதை­ய­டுத்து, இரு நாடு­களும், வரி குறைப்பு தொடர்­பாக, இரு முறை நடத்­திய பேச்சு, தோல்­வி­யில் முடிந்­தது. இந்­நி­லை­யில், ‘‘சீனா­வின், 1.40 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான பொருட்­க­ளுக்கு, மூன்­றாம் கட்­ட­மாக, மீண்­டும் வரி உயர்த்­தப்­படும்,’’ என, அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப், கடந்த வார இறு­தி­யில் அறி­வித்­தார். இத­னால், அமெ­ரிக்கா –சீனா இடை­யி­லான வர்த்­த­கப் போர் மேலும் தீவி­ர­மா­கும் என, தெரி­கிறது.

இந்­நி­லை­யில், வரி உயர்­வால் அமெ­ரிக்க பொருட்­க­ளின் இறக்­கு­மதி செல­வி­னம் அதி­க­ரித்­துள்­ள­தால், அப்­பொ­ருட்­களை, வேறு நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யும் நட­வ­டிக்­கை­யில், சீனா இறங்­கி­யுள்­ளது. சமீ­பத்­தில், பிரே­சில் நாட்­டில் இருந்து சோயா­பீன் இறக்­கு­ம­தியை துவக்­கி­யுள்­ளது. இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி, சீனா­வுக்கு, 40க்கும் மேற்­பட்ட பொருட்­களை ஏற்­று­மதி செய்ய, இந்­தியா திட்­ட­மிட்­டுள்­ளது.

மாட்டிறைச்சி :
இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: சீனா­வுக்கு ஏற்­று­மதி செய்ய, திராட்சை, பருத்தி, புகை­யிலை, உருக்கு கொதி­க­லன் உள்­ளிட்ட, பொருட்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. ஆய்வு ஒன்­றில், 80க்கும் அதி­க­மான பொருட்­கள் ஏற்­று­ம­திக்கு வாய்ப்­பு உள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. குறிப்­பாக, பதப்­ப­டுத்­தப்­பட்ட மாட்­டி­றைச்சி, பாதாம் பருப்பு உள்­ளிட்ட, 20 பொருட்­களை அதிக அள­வில் ஏற்­று­மதி செய்­யும் திறன் இந்­தி­யா­விற்கு உள்­ள­தாக, அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த புள்­ளி­வி­ப­ரங்­களை, அனைத்து அரசு துறை­க­ளுக்­கும், தொழில் கூட்­ட­மைப்­பு­க­ளுக்­கும் அனுப்பி, உற்­பத்­தியை அதி­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­களை முடுக்கி விடு­மாறு, மத்­திய அரசு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம், சீனா­வில் உள்ள இந்­திய துாதர­கத்­திற்கு, அறிக்கை அனுப்­பி­யுள்­ளது. அதில், இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளு­டன், சீன வர்த்­த­கர்­கள் பேச்சு நடத்த ஏற்­பாடு செய்­யு­மாறு கேட்­டுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. இது போன்ற நட­வ­டிக்­கை­கள் மூலம், வரும் மாதங்­களில், சீனா­வுக்­கான ஏற்­று­மதி அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

வாய்ப்பு உள்­ளது :
அமெ­ரிக்கா – சீனா இடை­யி­லான வர்த்­த­கப் போர், பல்­வேறு தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தும். அவற்­றில், பொருட்­கள் வினி­யோக நடை­மு­றை­யில் முக்­கிய மாற்­றங்­கள் நிக­ழும். ஒரு சில உற்­பத்தி பொருட்­க­ளின் மைய­மாக, இந்­தியா உரு­வெ­டுக்க வாய்ப்பு உள்­ளது
-அமிடென்டு பலித், மூத்த ஆய்வாளர், ஐ.எஸ்.ஏ.எஸ்., சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)