பதிவு செய்த நாள்
30 ஆக2018
03:22
சென்னை : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், எல்.ஐ.சி., வீட்டுக் கடன் நிதி நிறுவனத்தின், வரிக்கு பிந்தைய நிகர வருவாய், 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 9,594 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டு முதல் காலாண்டில், 8,699 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டையும் ஒப்பிடும் போது, நடப்பு நிதியாண்டில், கடன் உதவி வழங்கியதில், 10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
தனி வீட்டுக் கடன் உதவி, 7,260 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில், 6,674 கோடி ரூபாயாக இருந்தது. இதர திட்டப்பணிகளுக்காக, 889 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இது, 2017 – 18ம் ஆண்டில், 413 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டின் மொத்த வருவாய், 3,648 கோடி ரூபாய். நடப்பு நிதியாண்டின் மொத்த வருவாய், 11 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 4,051 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. வரிக்கு முந்தைய நிகர வருவாய், 788.40 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், 654.65 கோடி ரூபாயாகும்.
நடப்பு நிதியாண்டில், வரிக்கு பிந்தைய நிகர லாபம், 567.94 கோடி ரூபாயாகும். இது, 2017 – 18ம் ஆண்டில், 479.65 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|