பதிவு செய்த நாள்
30 ஆக2018
03:27
புதுடில்லி : மத்திய அரசு, உயிரி எரிபொருள் ஏற்றுமதிக்கு, புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. ஜத்ரோபா விதைகள், தாவரங்கள், விலங்குகளின் கொழுப்பு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் மூலம், உயிரி எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இதில், எத்தில் ஆல்கஹால், பெட்ரோலியம் எண்ணெய் போன்றவையும் அடங்கும்.
இத்தகைய உயிரி எரிபொருள்கள் ஏற்றுமதிக்கு, இதுவரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், ‘உயிரி எரிபொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு, உரிமம் பெற வேண்டும்’ என, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் அறிவித்துள்ளது. கடந்த வாரம், எரிபொருள் தவிர்த்து, நேரடி பயன்பாட்டிற்காக மட்டுமே உயிரி எரிபொருள்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய உத்தரவால், இனி, உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே, உயிரி எரிபொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள முடியும். கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், எத்தில் ஆல்கஹால் ஏற்றுமதி, 27.63 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 22.40 கோடி டாலராக இருந்தது.
இதே காலத்தில், பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் கனிம எண்ணெய் வகைகள் ஏற்றுமதி, 5 லட்சம் டாலரில் இருந்து, 80 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது. தாவரங்களில் தயாராகும், உயிரி டீசல், 27 லட்சம் டாலரில் இருந்து, 53 லட்சம் டாலராக அதிகரித்துள்ளது.
உயிரி டீசல்:
பெட்ரோலில், எத்தனால் கலப்பது போல, ஜத்ரோபா, தாவர எண்ணெய் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும், உயிரி டீசல் வகைகளை, டீசலில் கலக்கலாம். எனினும், இந்தியாவில், உயிரி எரிபொருள் உற்பத்தியில் அதிக நிறுவனங்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|