பதிவு செய்த நாள்
30 ஆக2018
23:25
புதுடில்லி : மத்திய அரசு, இயற்கை எரிவாயு கொள்முதல் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, உள்நாட்டு நிறுவனங்களிடம், 1 எம்.எம்.பி.டி., யூனிட் எரிவாயு, 3.06 டாலர் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இது, அக்டோபரில், 3.50 டாலராக உயர்த்தப்பட உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள், உள்நாட்டு தேவைக்கும் அதிகமாக எரிவாயுவை உற்பத்தி செய்கின்றன.
இந்நாடுகள் நிர்ணயிக்கும் சராசரி விலையின் அடிப்படையில், மத்திய அரசு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, எரிவாயு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளில், இரண்டாவது முறையாக, எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. இதனால், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலை உயரும். மேலும், உரம் மற்றும் மின் உற்பத்தி செலவினங்களும் அதிகரிக்கும்.
இந்தியாவின் மொத்த எரிவாயு தேவையில், 50 சதவீதம், இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. இது, உள்நாட்டை விட, இரு மடங்கிற்கும் அதிகமான விலையில் இறக்குமதியாவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|