பதிவு செய்த நாள்
30 ஆக2018
23:25
சேலம் : கற்பூரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரண மாக, அதன் விலை, மூன்று மடங்கு அதிகரித்து, கிலோ, 1,000 ரூபாயை தொட்டுள்ளது. பூஜை பொருட்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள கற்பூரம், பண்டிகை காலங்களில் அதிக அளவிலும், பிற காலங்களில் குறைந்த அளவிலும் விற்பனை ஆவது வழக்கம்.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 1 கிலோ கற்பூரம், 375 முதல், 400 ரூபாய் வரை விற்பனையானது. கற்பூரம் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, தொடர்ந்து விலை உயர்ந்து வந்தது. நேற்றைய நிலையில், கற்பூரம் கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, உற்பத்தியாளர்கள் அளவுகளை குறைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். இது, வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த கற்பூர தயாரிப்பாளர், சிவகுமார் கூறியதாவது: தேவையான அளவுக்கு மூலப்பொருள் கிடைக்காத தால், கற்பூரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. பண்டிகை சீசன் துவங்கி உள்ளதால், இன்னும், இரண்டு மாதம் வரை, விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டிசம்பர் மாதத்தில், கற்பூரத்தின் விலையில் சரிவு ஏற்படும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|