தமிழகத்தில் புதிய தொழில்முனைவோர் ஆறு ஆண்டுகளில் 3,000 உருவாக்கம்தமிழகத்தில் புதிய தொழில்முனைவோர் ஆறு ஆண்டுகளில் 3,000 உருவாக்கம் ... இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 71 ஐ எட்டியது இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 71 ஐ எட்டியது ...
கணினி மோசடியில் வங்கி டிபாசிட்டிற்கு உத்தரவாதம்; ‘சைபர் கிரைம்’ பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
23:31

புதுடில்லி : ரிசர்வ் வங்கி, ‘சைபர் கிரைம்’ எனப்­படும், கணினி சார்ந்த குற்றங்­க­ளால் பாதிக்­கப்­படும் வங்கி வாடிக்­கை­யா­ளர்­களின் டிபா­சிட்டை பாது­காப்­ப­தற்­கான விதி­முறை­களை உரு­வாக்கி உள்­ளது.

நாட்­டில், மின்­னணு தொழில்­நுட்­பத்­தி­லான பணப் பரி­மாற்­றம், வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. மொபைல் போனில் சுல­ப­மான பணப் பரி­வர்த்­தனை சேவையை, ‘பேடி­எம், போன்பீ, கூகுள் பே’ போன்ற பல நிறு­வ­னங்­கள் வழங்­கு­கின்­றன. மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்து வரும் வேளை­யில், அதற்கு அடித்­த­ள­மான கணினி ஒருங்­கி­ணைப்­பில் ஊடு­ருவி, நாசக்­கா­ரர்­கள் செய்­யும் மோச­டி­களும் பெருகி வரு­கின்­றன.

அலட்சியம் :
இத்­த­கைய மோச­டி­களை தடுக்க, வங்­கி­கள் அவற்­றின் கணினி ஒரு­ங்­கி­ணைப்பு சார்ந்த கட்­ட­மைப்பு வச­தியை பலப்­படுத்தி வரு­கின்­றன. எனி­னும், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் அஜாக்­கி­ரதை, அலட்­சி­யம், கணினி கட்­ட­மைப்­பில் உள்ள ஓட்டைகள் போன்­ற­வற்­றால், வங்கி கணக்­கில் பணம் மோசடி செய்­யும் சம்­ப­வங்­கள் தொடர்ந்த வண்­ணம் உள்­ளன.

இத்­த­கைய மோச­டி­களில், வாடிக்­கை­யா­ளர்­களின் பொறுப்பை வரை­ய­றுக்­கும் விதி­மு­றை­களை ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்­ளது. அதன்­படி, வங்கி கணக்கில் நடை­பெற்ற மோசடி குறித்து, மூன்று நாட்­க­ளுக்­குள் புகார் அளித்­தால், அந்த இழப்­பிற்கு வாடிக்­கை­யா­ளர் எந்த வகை­யி­லும் பொறுப்­பாக மாட்­டார். இது, வங்­கி­யின் கணினி குள­று­ப­டி­க­ளால், வாடிக்கை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் இழப்­பிற்­கும் பொருந்­தும்.

வங்­கி­யின் கணினி குறை­பா­டு­க­ளால், தங்­கள் கணக்­கில் அங்­கீ­கா­ர­மின்றி பணப் பரி­வர்த்­த­னை­கள் நடை­பெற்­றி­ருந்­தால், அது குறித்து, வாடிக்­கை­யா­ளர்­கள், 4 – -7 நாட்­க­ளுக்­குள் புகார் அளிக்க வேண்­டும். இதில், வங்கி கணக்­கின் தன்மை, மோசடி நடை­பெற்ற இடம் ஆகியவற்றை பொறுத்து, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு உள்ள பொறுப்பு, 5,000 – 25 ஆயி­ரம் ரூபாய் வரை தான் என, வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது.

இயக்குனர் குழு :
அங்­கீ­கா­ர­மற்ற முறை­யில் நடை­பெற்ற பரி­வர்த்­த­னை­யால், வாடிக்­கை­யா­ளர் இழந்த பணத்தை, வங்­கி­கள், 10 நாட்­க­ளுக்­குள், அவர்­க­ளின் கணக்கில் செலுத்த வேண்­டும். வங்கி கணக்­கில் மோசடி நடை­பெற்று, ஒரு வாரத்­திற்கு பின், புகார் அளித்­தால், அது குறித்த முடிவை, வங்கி இயக்­கு­னர் குழு எடுக்க வேண்டும். பண மோசடி நடை­பெற்ற, 90 நாட்­க­ளுக்­குள், அதற்­கான பொறுப்பை யார் ஏற்­பது என்­பது குறித்த விசா­ர­ணையை, வங்கி இயக்­கு­னர் குழு முடிக்க வேண்­டும்.

மோசடி நபர்­க­ளி­டம் வங்கி கணக்கு எண், ‘டெபிட், கிரெ­டிட் கார்டு’ விப­ரங்­கள் போன்­ற­வற்றை அளித்து, பணத்தை இழக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் செயல்­க­ளுக்கு, வங்­கி­கள் பொறுப்­பேற்­காது. மேற்­கண்ட விதி­மு­றை­களை அமல்­ப­டுத்­து­வ­தற்­கான கால­வ­ரை­யறை எதை­யும், ரிசர்வ் வங்கி தெரி­விக்­க­வில்லை.

----
மோசடி புகார் கொடுக்­கும் காலம் - வாடிக்­கை­யா­ள­ரின் பொறுப்பு
----
3 வேலை நாட்­க­ளுக்­குள் - எது­வும் இல்லை
4- – 7 வேலை நாட்­க­ளுக்­குள் - 5,000 – 25,000 ரூபாய் வரை
7 வேலை நாட்­க­ளுக்கு மேல் - வங்கி இயக்­கு­னர் குழு கொள்கை சார்ந்த முடிவு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)