பதிவு செய்த நாள்
31 ஆக2018
10:00
மும்பை : வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், எண்ணெய் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதாலும் இந்திய ரூபாய் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் 70.74 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆக.,31, காலை 9.15 மணி நிலவரம்) 70.95 ஆக இருந்தது.
வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே ரூபாய் மதிப்பு 26 காசுகள் வரை சரிந்து 71 என்ற நிலையை எட்டியது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளதும் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆசிய சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 78 அமெரிக்க டாலராக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|