63வது ஆண்டில் நுழையும் எல்.ஐ.சி., நிறுவனம்63வது ஆண்டில் நுழையும் எல்.ஐ.சி., நிறுவனம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2018
05:20

புதுடில்லி : நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 8.2 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.

இது, 15 காலாண்­டு­க­ளுக்கு பின், காணப்­படும் சிறப்­பான வளர்ச்­சி­யா­கும். இதற்கு முன், 2014- – 15ம் நிதி­யாண்­டின், ஜூலை – செப்., காலாண்­டில் தான், அதி­க­பட்­ச­மாக, 8.4 சத­வீத வளர்ச்சி எட்­டப்­பட்­டது.

இது குறித்து, மத்­திய புள்­ளி­யி­யல் துறை அலு­வ­ல­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 8.2 சத­வீ­த­மாக உயர்ந்­து உள்­ளது. மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்பு, 8.2 சத­வீ­தம் உயர்ந்து, 33.74 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

இது, கடந்த, 2017 -–18ம் நிதி­யாண்­டின், முதல் காலாண்­டில், 31.18 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. வேளாண், தயா­ரிப்பு உள்­ளிட்ட துறை­க­ளின் உற்­பத்தி நன்கு இருந்­த­தால், மதிப்­பீட்டு காலாண்­டில், நாட்­டின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம், சிறப்­பான முறை­யில் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

சீனாவை விஞ்­சி­யது இந்­தியா :
நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, 6.7 சத­வீ­த­மாக உள்­ளது. இதே காலத்­தில் இந்­தியா, 8.2 சத­வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை பெற்­றுள்­ளது. இதன் மூலம், வேக­மான பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் இந்­தியா, சீனாவை விஞ்சி முன்­னே­றி­யுள்­ளது.

முக்­கிய எட்டு துறை­களும் சாதனை :
கடந்த ஜூலை­யில், நிலக்­கரி, சிமென்ட் உள்­ளிட்ட, முக்­கிய எட்டு துறை­க­ளின் உற்­பத்தி, 6.6 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, கடந்த ஆண்டு, ஜூலை­யில், 2.9 சத­வீ­த­மாக இருந்­தது.

மதிப்­பீட்டு மாதத்­தில், நிலக்­கரி துறை­யின் உற்­பத்தி, 9.7 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது. பெட்­ரோ­லிய சுத்­தி­க­ரிப்பு பொருட்­கள் துறை, 12.3 சத­வீத உயர்வை எட்­டி­யுள்­ளது. உரத் துறை­யின் உற்­பத்தி, 1.3 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. சிமென்ட் துறை­யின் உற்­பத்தி, 10.8 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. அதே­ச­ம­யம், கச்சா எண்­ணெய் மற்­றும் இயற்கை எரி­வாயு துறை­கள், உற்­பத்தி வளர்ச்­சி­யில் பின்­ன­டைவை கண்­டுள்­ளன.

கடந்த ஜூலை­யில், உருக்கு துறை உற்­பத்தி வளர்ச்சி, 6 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், 9.4 சத­வீ­த­மாக இருந்­தது. நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜூலை வரை­யி­லான நான்கு மாதங்­களில், முக்­கிய எட்டு துறை­க­ளின் உற்­பத்தி, 5.8 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, 2017 – -18ம் நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், 2.6 சத­வீ­த­மாக இருந்­தது.

எட்டு முக்­கிய துறை­களில், நிலக்­கரி, கச்சா எண்­ணெய், இயற்கை எரி­வாயு, பெட்­ரோ­லிய சுத்­தி­க­ரிப்பு பொருட்­கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்­சா­ரம் ஆகி­யவை அடங்­கும். இவை, நாட்­டின் தொழில் துறை உற்­பத்­தியை கணக்­கி­டு­வ­தில், 38 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)