பதிவு செய்த நாள்
04 செப்2018
00:21
புதுடில்லி:கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், பங்குகளாக மாறாத பத்திரங்கள் மூலமாக, 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனங்கள் நிதி திரட்டி உள்ளன. இதற்கு முந்தைய ஆண்டை, இதே காலகட்டத்தோடு ஒப்பிட்டால்,இது, 5 மடங்கு உயர்வாகும்.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், ஏழு நிறுவனங்கள், பங்குகளாக மாறாத பத்திரங்கள் மூலமாக, 21 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன.வணிக விரிவாக்கம், செயல்பாட்டு மூலதனம், பொதுவான நிர்வாக செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.
கொசமட்டம் பைனான்ஸ், முத்துாட் பைனான்ஸ், ஸ்ரீ எக்யூப்மென்ட் பைனான்ஸ், திவான் ஹவுஸிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஜெ.எம்.பைனான்ஷியல் கிரெடிட், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி மற்றும் இ.சி.எல்.பைனான்ஸ் நிறுவனங்கள் நிதி திரட்டியது.இவை, மொத்தம், 21,048 கோடி ரூபாயை இத்தகைய பத்திரங்கள் மூலமாக திரட்டி உள்ளன. 2017 – 2018ம் நிதியாண்டில், இதே காலகட்டத்தில், மூன்று நிறுவனங்கள், இத்தகைய பத்திரங்களை வெளியிட்டு, 3,681 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.
அந்த நிதியாண்டில், மொத்தம், 4,950 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே பங்குகளாக மாறாத பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.தகுதி வாய்ந்த நிறுவனங்களின் மூதலீடு குறைந்தது, பங்குகளின் விலை அதிகம் உயராதது, வட்டி விகிதங்கள் தொடர்ச்சியாக உயரும் என்ற நிலை போன்ற காரணங்களால், பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டுவது அதிகரித்துள்ளது என, சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|