பதிவு செய்த நாள்
04 செப்2018
00:27
தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’யின் மாதக் கட்டணத்தை குறைக்க, புதிதாக பொறுப்பேற்றுள்ள பொது மேலாளர், நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழக அரசு, 2007ம் ஆண்டு, அரசு கேபிள், ‘டிவி’யை துவங்கியது. 2011ம் ஆண்டு முதல், குறைந்த கட்டணமாக, 70 ரூபாய்க்கு, 100 சேனல்கள் என, முழுவீச்சில் தனது சேவையில் ஈடுபட்டது.
கடந்த, 2014ம் ஆண்டு முதல், சென்னை உட்பட நான்கு மாநகரங்களில், டிஜிட்டல் முறையில் கேபிள், ‘டிவி’ சேவை துவங்கப்பட்டது.தற்போது, தமிழகம் முழுவதும், 30 லட்சம், ‘செட்டாப் பாக்ஸ்’கள், இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு கேபிள், ‘டிவி’ பொது மேலாளர், சில தினங்களுக்கு முன் மாற்றப்பட்டார்.
இது குறித்து, அரசு கேபிள், ‘டிவி’ ஆப்பரேட்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கூறியதாவது:‘செட்டாப் பாக்ஸ்’க்கு மாறிய பின், கேபிள் சிக்னலில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இது குறித்து, கேபிள், ‘டிவி’ பொது மேலாளருக்கு, ஆப்பரேட்டர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர்.மேலும், தனியார் கேபிள் நிறுவனங்களின் கட்டணங்களை விட, அரசு கேபிள், ‘டிவி’ கட்டணம் அதிகமாக உள்ளது.
அரசு ஆப்பரேட்டர்களுக்கு கிடைக்கும் வருவாயும், தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களை விட, 50 சதவீதம் குறைவு. மேலும், அரசு கேபிள், கட்டணக் குறைப்புக்கு தயாராக இல்லை.இந்நிலையில் தற்போது, புதிய பொது மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம், கூட்டமைப்பின் கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளோம். எங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|