பதிவு செய்த நாள்
04 செப்2018
00:29
புதுடில்லி:கடந்த ஆகஸ்டில், ‘சென்கோ கோல்டு, ஸ்டட்ஸ் அக்ஸசரீஸ்’ உட்பட, 11 நிறுவனங்கள், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளன.
இந்த வகையில், ‘ஹர்ஷா இன்ஜினியர்ஸ், பெக்டர்ஸ் புட் ஸ்பெஷாலிட்டிஸ், சன்சேரா இன்ஜினியரிங், என்டெய்ரிஹிலன்ட், தோத்லா, ஷியாம் மெட்டாலிக்ஸ் அண்டு எனர்ஜி, ஸெல்ப்மாக் டிசைன் அண்டு டெக்னாலஜி’ உள்ளிட்ட, 11 நிறுவனங்கள், 7,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளன.பெரும்பான்மையான நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்கம் மற்றும் நடைமுறை மூலதன தேவைகளுக்கு, பங்கு வெளியீட்டில் இறங்குகின்றன.சில நிறுவனங்கள், பழைய கடன்களை திரும்பத் தரவும், ‘பிராண்டு’ புகழை உயர்த்தவும், பங்குகளை விற்பனை செய்கின்றன.
துணிகர முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளை திரும்ப அளிக்கும் நோக்கில், சில நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொள்கின்றன.பங்குச் சந்தையில், ‘செபி’ மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் காரணமாகவும், புதிய பங்கு வெளியீடுகளுக்கு, முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிட்டி வருகிறது.இவற்றையெல்லாம் விட, தற்போது மிகுந்த எழுச்சியுடன் காணப்படும் பங்குச் சந்தையும், புதிய பங்கு வெளியீடுகள் அதிகரிக்க துணை புரிந்துள்ளது.இந்தாண்டு, இதுவரை, 21 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 28 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|