நாட்டின் வளர்ச்சி சரிய ரகுராம் ராஜன் காரணம்:'நிடி ஆயோக்' துணை தலைவர் ராஜிவ் குமார்  குற்றச்சாட்டுநாட்டின் வளர்ச்சி சரிய ரகுராம் ராஜன் காரணம்:'நிடி ஆயோக்' துணை தலைவர் ... ... இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் ...
மதுரை - சிங்கப்பூர் இடையே தினசரி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2018
17:13

மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கும் இடையே தினசரி நிறுத்தமில்லா விமான சேவையை ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் துவங்கி உள்ளது. சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தும் புதிய சீர்மிகு சேவை தமிழர்களையும், தாய் தமிழகத்தையும் இணைக்கும் மற்றொரு உறவுப்பாலம் இது திகழும்.

குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்குவதில் நாட்டின் முன்னணி நிறுவவனமாக விளங்கும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ், இப்போது அறிமுகப்படுத்தியுள்ள சேவை மூலம் இனி மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கும் பயணிகள் நேரடியாக குறைந்த நேரத்தில் சென்று வரலாம். இதில் சிறப்பான அம்சம் என்றால் தினசரி எங்கும் இடையில் நிற்காத விமானம் இது.

கூடுதல் பொருட்கள் ஏதேனும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருந்தால் அதை நீங்கள் பயணச்சீட்டை வாங்கும்போதே, ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது மை புக்கிங் மூலம் தேவையான மாறுதல்களைச் செய்து, உங்களுக்கான இலவச அளவு சாமான்களுடன் கூடுதல் சாமான்களையும் கொண்டு செல்லலாம். 5 கிலோ மற்றும் 10 கிலோ அளவில் இந்தக் கூடுதல் சாமான் தேவையை பதிவு செய்யலாம்.

விமானத்தில் உங்களுக்கு விருப்பமான சுவையான காலை, மாலை, இரவு சைவ, அசைவ உணவு வகைகளை மெனுவில் இருந்து தேர்வு செய்யலாம். 24 மணிநேரத்துக்கு முன்பாக பதிவு செய்யலாம்.

தரமான சேவையை மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த சேவையை ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்குகிறது. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி திருப்தியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யலாம்.

இந்தியாவின் முதல் குறைந்த கட்டண சர்வதேச விமான சேவையைத் தொடங்கிய நிறுவனம் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ். நாடு முழுவதும் 30 நகரங்களுக்கு வாரந்தோறும் 583 விமான சேவைகளை ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்குகிறது.

கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், மங்களூரு, கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, விஜயவாடா, மும்பை, புணே, அமிர்தசரஸ், லக்னௌ, ஜெய்ப்பூர், வாராணசி, புதுதில்லி, சண்டீகர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இனியென்ன! ஹனிமூன் டிரிப்பா, பிஸினஸ் டூரா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே குதூகலமாக சென்று வரலாம்.

மேலும் தகவல்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்...
https://www.airindiaexpress.in/en

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)