பதிவு செய்த நாள்
05 செப்2018
00:08
மும்பை:இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள், கடந்த ஜூலை மாதத்தில், 36 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த ஜூலையில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் 9,935 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளன. இவை இந்நிறுவனங்களின் வெளிநாட்டு துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டுமுயற்சிகளில் முதலீடு செய்யப்பட்டவை ஆகும்.இருப்பினும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 36 சதவீதம் குறைவானதாகும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், இந்திய நிறுவனங்கள், 15 ஆயிரத்து, 511 கோடி ரூபாயை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளன. நடப்பாண்டின் ஜூன் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், இந்தியாவுக்கு வெளியே, 14,796 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதத்தை பொருத்தவரை, வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில், சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா, ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ், இன்டர்குளோப் என்டர்பிரைசஸ், மற்றும் ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல் ஆகியவை முக்கியமானவையாகும்.இவற்றில், சீரம் இன்ஸ்டிடியுட், நெதர்லாந்தில், 1,339 கோடி ரூபாயையும், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ், இத்தாலியில் 477 கோடி ரூபாயையும், இன்டர்குளோப் நிறுவனம், பிரிட்டனில் 390 கோடி ரூபாயையும், ஜெ.எஸ்.டபுள்யு, அமெரிக்காவில் 360 கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|