பதிவு செய்த நாள்
07 செப்2018
00:03
ஈரோடு:கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில், மூன்று கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை நேற்று கூடியது. ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் இருந்து, மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கடந்த ஒன்றரை மாதமாக கடும் மழை, வெள்ளப் பாதிப்புகள் இருந்தன. இதனால், அம்மாநில வியாபாரிகள் வருகை வெகுவாக குறைந்தது. ஒரு வாரமாக அம்மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதால், வியாபாரிகள் வரத் துவங்கினர்.
தமிழகத்தில், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சந்தையில் வியாபாரம் களை கட்டியது. 12 ஆயிரம் முதல், 34 ஆயிரம் ரூபாய் வரை, 400 பசுக்கள்; 14 ஆயிரம் முதல், 38 ஆயிரம் ரூபாய் வரை, 400 எருமைகள்; 1,000முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில், 300 கன்றுகள் விற்பனைக்கு வந்தன.
இது பற்றி, சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது:பல நாட்களுக்குப் பின், நேற்று அதிக எண்ணிக்கையில் மாடுகள் கொண்டு வரப்பட்டன. வியாபாரிகள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். மழை பெய்து, பசுந்தீவனம் அதிகம் கிடைப்பதே இதற்கு காரணம். கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநில வியாபாரிகளும் வந்ததால், 1,000கால்நடைகளுக்கு மேல் விற்பனையாகின. மொத்தம், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|