பதிவு செய்த நாள்
07 செப்2018
00:07
புதுடில்லி:டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, தான் ஒரு சிறந்த தொழிலதிபர் மட்டுமல்ல; திறமையான முதலீட்டாளரும் கூட என்பதை நிரூபித்திருக்கிறார்.
ரத்தன் டாடா, கோவையைச் சேர்ந்த, ஆம்பியர் எனும் மின்சார வாகன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். தற்போது, இரண்டு மடங்கு லாபத்துடன் அதிலிருந்து வெளியேறி இருக்கிறார்.ரத்தன் டாடா, ஆம்பியர் நிறுவனத்தில், தன் சொந்தப் பணத்தில் இருந்து, மூன்று கோடி ரூபாயை, 2015ம் ஆண்டில் முதலீடு செய்திருந்தார்.
ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் முதன் முதலாக அவர் செய்த முதலீடு இதுதான்.இந்நிலையில், அவர் தன்னுடைய மொத்த முதலீட்டையும் இரு மடங்கு லாபத்தில் அண்மையில் விற்றுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த பங்குகளை அவர், மும்பையைச் சேர்ந்த சிறிய இன்ஜின் உற்பத்தியாளரான, கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்துக்குவிற்றுள்ளதாகவும் தெரிகிறது.இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவர், கிருஷ் கோபாலகிருஷ்ணனும், தன்னிடமுள்ள ஆம்பியர் நிறுவன பங்குகள் முழுவதையும் விற்றுவிட்டு வெளியேறி உள்ளார்.
இதையடுத்து, ஆம்பியர்நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள், கிரீவ்ஸ் காட்டன் வசம் வந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.தற்சமயம் ஆம்பியர்நிறுவனம் மின்சார ஸ்கூட்டர், மின்சார சைக்கிள், மற்றும் மூன்று சக்கர சரக்கு வாகனம் ஆகியவற்றை தயாரிக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|