பதிவு செய்த நாள்
07 செப்2018
00:10
புதுடில்லி:‘மத்திய அரசு, மின்சார வாகனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில், தேசிய கொள்கை வெளியிட வேண்டும்’ என, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ வலியுறுத்தி உள்ளது.
இக்கூட்டமைப்பின் தலைவர், அபய் பிரோடியா கூறியதாவது:கடந்த ஆண்டு, நாட்டில் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.அறிவிப்புஅதன்படி, பொது போக்குவரத்தில், 2030ல், 40 சதவீதம்; 2047ல், 100 சதவீத மின் வாகனங்கள் சாலைகளில் செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது தொடர்பாக, மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, சியாம், வாகன கொள்கையை உருவாக்கியது.
இந்நிலையில், ‘மின் வாகனங்களுக்கு நீண்ட கால கொள்கையை அமல்படுத்தும் திட்டம் இல்லை’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதலீடு
இதனால், வாகன துறையினர், மின் வாகன தயாரிப்பு தொடர்பான திட்டங்கள், எதிர்கால முதலீடுகள் போன்றவற்றை உருவாக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.வாகனங்கள், பாரம்பரிய எரிபொருள் பயன்பாட்டில் இருந்து மின்சாரத்திற்கு மாறும் போது, போதுமான கட்டமைப்பு வசதிகளை படிப்படியாக செய்ய வேண்டியது அவசியம்.இது, மிகச் சவாலான மாற்றம். அதனால், திடீரென்று கொள்கை அறிவிப்புகளை செயல்படுத்த முனைந்தால், அது, வாகன துறையின் வளர்ச்சியை பாதிக்கும். அத்துடன், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானதாக இருக்கும்.
தனி கொள்கை
இந்திய வாகன துறை, மின்சார வாகனங்களை எதிர்க்கவில்லை. அதேசமயம், மின்சார வாகனத்திற்கு என, தனி கொள்கையை வெளியிட்டால், அது, வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு உதவும்.ஆகவே, மின்சார வாகனங்களுக்கு, நீண்ட கால கொள்கையை, மத்திய அரசு வெளியிட வேண்டும். சியாம் ஏற்கனவே, 2011ல் மின் வாகன கொள்கையை, அப்போதைய அரசிடம் வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|