பதிவு செய்த நாள்
07 செப்2018
00:12
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யைச் சேர்ந்த, உயர் அதிகாரிகள் குழு, வெளிநாடுகளுக்குச் சென்று, வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன், எதிரியம்’ உள்ளிட்ட மெய்நிகர் கரன்சிகளின் தொழில்நுட்பங்களை அறிந்து வந்துள்ளது.
இக்குழு, ஜப்பான் பைனான்சியல் சர்வீசஸ், பிரிட்டனின் பைனான்சியல் கண்டக்ட் ஆணையம் மற்றும் சுவிட்சர்லாந்தின் நிதிச் சந்தை மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன், மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைகள் குறித்து கேட்டறிந்துள்ளது.மேலும், புதிய பங்கு வெளியீடு போல, மெய்நிகர் கரன்சி சந்தையில் வெளியிடப்படும், ஐ.சி.ஓ., மெய்நிகர் நாணயம் பற்றியும் அறிந்து வந்துள்ளது.
இதன் மூலம், மெய்நிகர் கரன்சி தொடர்பாக, உலக நாடுகள் பின்பற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு விதிமுறைகளை ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது என, செபி தெரிவித்துள்ளது.மத்திய அரசு, மெய்நிகர் கரன்சி தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆராய, உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
இதனிடையே, மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைக்கு, ரிசர்வ் வங்கி விதித்த தடையை எதிர்த்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|