பட்­டுக்­கூடு விலை சரிவுபட்­டுக்­கூடு விலை சரிவு ... கயிறு வாரியத்தின் புதிய திட்டம் கயிறு வாரியத்தின் புதிய திட்டம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி சாரா, 400 நிதி நிறுவனங்கள் மூடல் களையெடுப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2018
00:15

புதுடில்லி:விதி­மு­றை­களை பின்­பற்­றா­மல் உள்ள, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளின் உரி­மங்­களை, ரிசர்வ் வங்கி ரத்து செய்து வரு­கிறது.

நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், ஏப்., – ஆகஸ்ட் வரை, 392 வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளின் உரி­மங்­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.இதில், கடந்த இரண்டு மாதங்­களில், மிக அதி­க­மான நிறு­வ­னங்­கள் மூடு­விழா கண்­டுள்­ளன.இது தவிர, 79 வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள், உரி­மங்­களை திரும்ப அளித்­துள்­ளன.

நோக்கம்

இது குறித்து, ரிசர்வ் வங்கி அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:கடந்த, 2014 முதல், ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் தொடர்­பான விதி­மு­றை­களை கடு­மை­யாக்கி வரு­கிறது.இந்­நி­று­வ­னங்­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் முத­லீ­டு­க­ளுக்கு பாதிப்­பில்­லாத வகை­யில், வலு­வான நிதி­யா­தா­ரங்­களை கொண்­டி­ருக்க வேண்­டும் என்­பது தான், ரிசர்வ் வங்­கி­யின் நோக்­கம்.

அதன்­படி, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள், 2016 மார்ச் முதல், குறைந்­த­பட்­சம் ஒரு கோடி ரூபாய் சொந்த மூல­த­னத்தை பரா­ம­ரித்து வர வேண்­டும்; இதை, 2017 மார்ச் முதல், இரண்டு கோடி ரூபா­யாக உயர்த்த வேண்­டும் என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­தி­ருந்­தது.

மேலும், 2016 மார்ச்­சில், பங்கு மூல­த­னத்தை, 8.5 சத­வீ­த­மாக உயர்த்தி, 2018 மார்ச்­சில், 10 சத­வீ­த­மாக அதி­க­ரிக்க வேண்­டும் என­வும் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.வங்­கி­களை போல, தவணை செலுத்த தவ­று­வோ­ரின் கணக்கை, 90 நாட்­க­ளுக்கு பின், வாராக் கடன் பட்­டி­ய­லில் சேர்க்­கு­மா­றும் ரிசர்வ் வங்கி கூறி­யது.

அவகாசம்

இந்த விதி­மு­றை­களை பின்­பற்ற, ரிசர்வ் வங்கி ஓராண்டு கூடு­த­லாக அவ­கா­ச­மும் அளித்­தது. இந்த அவ­கா­சம், மார்ச்­சு­டன் முடிந்த நிலை­யில், விதி­மு­றை­களை பின்­பற்­றாத நிறு­வ­னங்­கள் மீது, ரிசர்வ் வங்கி நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.இதன் கார­ண­மாக, 392 வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளின் உரி­மம் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. இது தவிர, போது­மான நிதி­யா­தா­ரம் இல்­லாத பல நிறு­வ­னங்­கள், உரி­மத்தை ஒப்­ப­டைத்து வரு­கின்­றன.

வங்கி சாரா நிதி துறை­யில், கடந்த சில ஆண்­டு­க­ளாக, நுகர்­வோர் கடன் பிரி­வின் வளர்ச்சி, பாரம்­ப­ரிய வங்­கி­களை விஞ்­சும் அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது.அதற்­கேற்ப, நிறு­வ­னங்­க­ளின், சொத்து மதிப்­பும் உயர வேண்­டும். அத­னால், ரிசர்வ் வங்கி விதி­மு­றை­களை பின்­பற்­றாத நிறு­வ­னங்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

வாராக் கடன் குறைந்தது

கடந்த நிதி­யாண்­டில், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளின் வர்த்­த­கம், 22 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. கடன் வளர்ச்சி, 14.6 சத­வீ­தத்­தில் இருந்து, 21 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. மொத்த வாராக் கடன், 6.1 சத­வீ­தத்­தில் இருந்து, 5.8 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
இத­யம் போன்­றது

குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்­கு­வ­தால், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் துறையை, பொரு­ளா­தா­ரத்­தின் இத­யம் என, வர்­ணிக்­க­லாம். இத்­துறை சீர்­கு­லைந்­தால் அது, பொரு­ளா­தா­ரத்­தின் இதர பிரி­வு­களை பாதிக்­கும்அருண் சிங், தலைமை பொருளாதார வல்லுனர், ‘டன் அண்டு பிராட்ஸ்டிரீட்’

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)