‘ஏற்றுமதியை மேம்படுத்த கடன் காப்பீடு அவசியம்’‘ஏற்றுமதியை மேம்படுத்த கடன் காப்பீடு அவசியம்’ ... ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார்  சீனாவின், ‘நம்பர் – 1’ பணக்காரர் ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார் சீனாவின், ‘நம்பர் ... ...
பொது நிறுவன பங்குகள் திரும்ப பெறும் திட்டம் மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2018
00:06

புதுடில்லி:மத்திய நிதியமைச்சகம்,பொதுத் துறையைச் சேர்ந்த, 13 நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்திற்கு, கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு, நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டில் திரட்டியதை விட, 15 சதவீதம் அதிகம்.இந்நிலையில், பொதுத் துறையைச் சேர்ந்த, 13 நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்திற்கு, மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, என்.டி.பி.சி., கோல் இந்தியா, என்.எம்.டி.சி., - பி.எச்.இ.எல்., - என்.எச்.பி.சி., - எஸ்.ஜே.வி.என்., ஆகியவை, பங்குகளை திரும்பப் பெற உள்ளன.மேலும், என்.எல்.சி., இந்தியா, கே.ஐ.ஓ.சி.எல்., இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், என்.பி.சி.சி., மற்றும் நால்கோ உள்ளிட்ட நிறுவனங்களும், பங்குகளை திரும்பப் பெறும் என, தெரிகிறது.

இதன் மூலம், மத்திய அரசுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வசூல் குறைவு போன்றவற்றால், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, இலக்கை விஞ்சும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதை சமாளிக்க, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மற்றும் பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை, மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை

நடப்பு, 2018 -- 19ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை இலக்கு, 3.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், ஏப்., - ஜூன் காலாண்டில், 68.7 சதவீதம் எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)