பதிவு செய்த நாள்
08 செப்2018
00:06
புதுடில்லி:மத்திய நிதியமைச்சகம்,பொதுத் துறையைச் சேர்ந்த, 13 நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்திற்கு, கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அரசு, நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டில் திரட்டியதை விட, 15 சதவீதம் அதிகம்.இந்நிலையில், பொதுத் துறையைச் சேர்ந்த, 13 நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்திற்கு, மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, என்.டி.பி.சி., கோல் இந்தியா, என்.எம்.டி.சி., - பி.எச்.இ.எல்., - என்.எச்.பி.சி., - எஸ்.ஜே.வி.என்., ஆகியவை, பங்குகளை திரும்பப் பெற உள்ளன.மேலும், என்.எல்.சி., இந்தியா, கே.ஐ.ஓ.சி.எல்., இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், என்.பி.சி.சி., மற்றும் நால்கோ உள்ளிட்ட நிறுவனங்களும், பங்குகளை திரும்பப் பெறும் என, தெரிகிறது.
இதன் மூலம், மத்திய அரசுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வசூல் குறைவு போன்றவற்றால், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, இலக்கை விஞ்சும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதை சமாளிக்க, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மற்றும் பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை, மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை
நடப்பு, 2018 -- 19ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை இலக்கு, 3.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், ஏப்., - ஜூன் காலாண்டில், 68.7 சதவீதம் எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|