பதிவு செய்த நாள்
08 செப்2018
00:09
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு, ரிசர்வ் வங்கி, 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
வங்கியில் நடைபெற்ற மோசடியை தாமதமாக கண்டுபிடித்தமைக்கும், அது குறித்து, ரிசர்வ் வங்கிக்கு உடனடியாக தெரிவிக்காமல் மறைத்ததற்கும், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்தாண்டு ஜனவரியில், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு, ரிசர்வ் வங்கி, ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது. அதில், வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு, விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இதையடுத்து, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் மூத்த அதிகாரிகள், ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். அத்துடன், குற்றச்சாட்டுகளை மறுத்து, அது தொடர்பான ஆவணங்களையும் அளித்தனர்.அவற்றை பரிசீலித்த ரிசர்வ் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்த காரணங்கள் ஏற்கக் கூடியவையாக இல்லை எனக் கூறி, நேற்று அபராதம் விதித்துள்ளது.
இது போன்ற தவறுகள் இனி நிகழாவண்ணம், வங்கியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாக, யூனியன் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|