பதிவு செய்த நாள்
08 செப்2018
00:10
மும்பை:ஐ.டி.பி.ஐ., வங்கியில், எல்.ஐ.சி.,யின் பங்கு மூலதனம், 51 சதவீதமாக உயரும்பட்சத்தில், அதை, 15 சதவீதமாக குறைக்க, ‘கெடு’ விதிக்கப்படும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, இரிடா தெரிவித்துள்ளது.
ஐ.டி.பி.ஐ., வங்கியில், மத்திய அரசு, 85.96 சதவீதம்; எல்.ஐ.சி., 7.98 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளன.இந்நிலையில், ஐ.டி.பி.ஐ., வங்கியில் உள்ள பங்கு மூலதனத்தை, 51 சதவீதமாக உயர்த்திக் கொள்ள, எல்.ஐ.சி., திட்டமிட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை அனுமதி வழங்கி உள்ளன.
ஆனால், விதிமுறைகளின்படி, ஒரு காப்பீட்டு நிறுவனம், வங்கிகளில், 15 சதவீதம் தான் பங்கு மூலதனம் மேற்கொள்ள முடியும்.இது குறித்து, இரிடா தலைவர், எஸ்.சி.குந்தியா கூறுகையில், ‘‘எல்.ஐ.சி.,யின் பங்கு மூலதனம், 51 சதவீதமாக உயரும்பட்சத்தில், அதை, விதிமுறைப்படி, 15 சதவீதமாக குறைக்க, கெடு விதிக்கப்படும்,’’ என்றார்.
இந்நிலையில், எல்.ஐ.சி.,, முதற்கட்டமாக, ஐ.டி.பி.ஐ., வங்கியின், 7 சதவீத பங்குகளை வாங்கி, பங்கு மூலதனத்தை, 14.9 சதவீதமாக உயர்த்திக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|