பதிவு செய்த நாள்
09 செப்2018
00:41
திருப்பூர்:ஆடை
உற்பத்தி துறைக் கான சலுகை, வரும், 30ம் தேதியுடன் முடிவதால்,
இறக்குமதி இயந்திரங்களுக்கு, ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்தும் சூழல்உருவாகியுள்ளது.
ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு,
இ.பி.சி.ஜி., திட்டம் (எக்ஸ்போர்ட் பெர்பார்மென்ஸ் கேப்பிட்டல்
கூட்ஸ்) கை கொடுத்து வருகிறது. இந்த திட்டத்தில்,
ஏற்றுமதியாளர்கள், முழு வரி விலக்குடன் இயந்திரங்களை
இறக்குமதி செய்ய அனுமதிக்கப் பட்டது.விலக்கு பெற்ற
வரித்தொகையை போல், ஆறு மடங்கு ஏற்றுமதியை, அடுத்த ஆறு ஆண்டில் செய்ய
வேண்டும் என்பது, இந்த திட்டத்தின் விதி.
திருப்பூர் ஆடை
ஏற்றுமதி நிறுவனங்கள், ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்கள், இந்த திட்டத்தை
பயன்படுத்தி, வரி விலக்குடன் இயந்திரங்களை இறக்குமதி
செய்கின்றன.இந்நிலையில், அக்., 1 முதல், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இயந்திரங்களுக்கு, ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலர், விஜயகுமார் கூறியதாவது:அக்., முதல், இறக்குமதிமிஷின்களுக்கு,
இ.பி.சி.ஜி., திட்டத்தில், சுங்க வரி விலக்கு மட்டுமே பெற முடியும்;
ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.செலுத்தும்
வரியை முழுமையாக உள்ளீட்டு வரி வரவாக பெறுவதற்கு, 10 ஆண்டுகள் வரை
காத்திருக்க வேண்டும். அதனால், ஐ.ஜி.எஸ்.டி., வரி விலக்கு சலுகையை,
தொடர்ந்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|