பதிவு செய்த நாள்
09 செப்2018
00:46
மும்பை:பங்கு
வர்த்தகத்தை, நள்ளிரவு வரை நீட்டிக் கும் திட்டம் தொடர்பாக, பங்கு
தரகு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காணுமாறு, மும்பை
மற்றும் தேசிய பங்குச் சந்தைகளை, ‘செபி’ கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய
பங்குச் சந்தைகள், காலை, 9:00 மணி முதல் மாலை, 3:30 வரை
செயல்படுகின்றன. அதேசமயம், விளைபொருள் முன்பேர சந்தை, காலை,
10:00 மணி முதல் இரவு, 11:55 மணி வரைஇயங்குகிறது.இதனால்,
சர்வதேச விளைபொருள் முன்பேர சந்தை நிலவரங்களின் அடிப்படையில்,
இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள முடிகிறது.
அறிக்கை
அதுபோல,
பங்குச் சந்தை வர்த்தகத்தையும் நள்ளிரவு வரை நீடிக்க வேண்டும் என,
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கோரி வந்தன.இதனால்,
அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பங்குச்
சந்தைகளில் ஏற்படும் தாக்கத்தை அன்றே அறிந்து, அதற்கேற்ற உத்திகளை,
முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் கையாள முடியும் என,
கூறப்படுகிறது.
எனவே, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள்,
அவற்றின் பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிப்பது தொடர்பான திட்ட
அறிக்கையை, செபியிடம் அளித்தன.அதை பரிசீலனை செய்த செபி, முதற்கட்டமாக, பங்குச் சந்தையில், முன்பேர வர்த்தகத்தைமட்டும் நள்ளிரவு வரை
நீட்டிக்க, மே, 4ல் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து,
அக்., 1 முதல் முன்பேர பங்கு வர்த்தகத்தை, இரவு, 11:55 மணி வரை
நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதில், பங்குச் சந்தைகள்
மும்முரமாக ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், முன்பேர பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்கும் திட்டத்திற்கு, பங்கு தரகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
வருவாய்
பங்கு
வர்த்தகத்தை நீட்டிப்பதால் வருவாய் அதிகரிக்கும் என்ற போதிலும்,
ஊழியர்கள் நிய மனம் உட்பட, நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் என,
பங்குத் தரகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, முன்பேர
பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்கும் திட்டம் குறித்து, பங்கு
தரகர்களுடன் ஆலோசனை நடத்தி, சமூக உடன்பாடு காணுமாறு, பங்குச்
சந்தை களுக்கு, செபி உத்தரவிட்டுள்ளது.
இதற்கு, பங்குத் தரகு
நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதனால், முன்பேர பங்கு
வர்த்தக நேரத்தை நீட்டிக்கும் திட்டம், அக்.,1ல் அமலுக்கு வருவது
கேள்விக்குறியாகி உள்ளது.
கருத்தொற்றுமை அவசியம்
புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, அனைத்து தரப்பினரிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதுஅவசியம்.
பொறுப்புள்ள நிறுவனங்கள், இந்த வழிமுறையைத் தான் பின்பற்றும். மிக
முக்கியமான, நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டம்
குறித்து,எங்களுடன் கலந்து பேசுமாறு செபி கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
உத்தம் பக்ரி
தலைவர், மும்பை பங்குச் சந்தை தரகர்கள் கூட்டமைப்பு
செலவினங்கள் அதிகரிக்கும்
பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிப்பதால் கிடைக்கும்கூடுதல் வருவாயை விட, நிர்வாக செலவினங்கள்அதிகரிக்கும். இது தொடர்பாக ஆலோசனை நடத்த, செபி அழைப்பு விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது
அலோக் சுரிவாலா
நிர்வாக இயக்குனர், சுரிவாலா செக்யூரிட்டீஸ்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|