முத­லீ­டு­க­ளின் வெற்­றிக்கு வழிமுத­லீ­டு­க­ளின் வெற்­றிக்கு வழி ... வரி ­தாக்­கல் செய்தோர் எண்ணிக்கை உயர்ந்தது ஏன்? வரி ­தாக்­கல் செய்தோர் எண்ணிக்கை உயர்ந்தது ஏன்? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை கண்ணை உறுத்தும் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
01:20

இத்­தனை ஆண்­டு­க­ளாக, சீனா மீது பாய்ந்து கொண்டு இருந்த அமெ­ரிக்க அதி­பர், தற்­போது, நேர­டி­யாக இந்­தியா மீது பாய ஆரம்­பித்­து­ விட்­டார். என்ன நடந்­தது? ஏன் நடந்­தது?


உலக வர்த்­தக அமைப்பு, மானி­யங்­க­ளை­யும், சலு­கை­க­ளை­யும் வழங்­கி­ய­தன் மூலம் சீனாவை வளர்த்­து­ விட்டு விட்­டது. வள­ரும் நாடு­கள் என்ற பெய­ரில், பல நாடு­களும் மானி­யங்­க­ளைப் பெற்று, முன்­னுக்கு வந்­து­ விட்­டன. அமெ­ரிக்­கா­வும் வள­ரும் நாடு தான். அதன் வளர்ச்சி முக்­கி­யம். அத­னால், இனி­மேல் சீனா­வுக்­கும், இந்­தி­யா­வுக்­கும் மானி­யங்­களை வழங்க முடி­யாது என்ற ரீதி­யில், அமெ­ரிக்க அதி­பர்,டொனால்டு டிரம்ப் பேசி­யுள்­ளது, கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


ஏற்­க­னவே, சீனா­வைப் பொரு­ளா­தார ரீதி­யா­கக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தற்­காக, அந்­நாட்­டில் இருந்து இறக்­கு­மதி செய்­யும் பொருட்­கள் மீது, அமெ­ரிக்கா கூடு­தல் வரி விதித்து, ‘வர்த்­தக போரு’க்குப் பிள்­ளை­யார் சுழி போட்­டது. அது, தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச அள­வில், அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தி வரு­கிறது.


இந்­நி­லை­யில், இந்­தி­யா­வின் மீது பாய்ச்­சல். நாம் என்ன செய்­து­விட்­டோம் அல்­லது செய்­யத் தவ­றி­விட்­டோம்?அதி­பர் டிரம்ப் ஒற்றை வரி­யில் மிரட்­டி­னா­லும், அதற்­குள் ஏரா­ள­மான பொருள் இருக்­கிறது. கொஞ்­சம் வர­லாற்­றுக்­குப் போனால் தான், அவ­ரது கோபத்­துக்­கான கார­ணம் புரி­யும்.இரண்­டாம் உலக போருக்­குப் பின், அமெ­ரிக்கா பல நாடு­க­ளோடு வர்த்­தக ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்­டது.


இதில், ஏரா­ள­மான வரிச் சலு­கை­கள் வழங்­கப்­பட்­டன. இதற்கு, ‘காட்’ ஒப்­பந்­தங்­கள் என்றே பெயர். உலக வர்த்­தக அமைப்­புக்கு முந்­தைய அமைப்பு தான், காட் எனப்­படும், ‘ஜென­ரல் அக்­ரி­மென்ட் ஆன் டாரிப் அண்டு டிரேட்’ என்­பது.வள­ரும் நாடு­கள் அப்­போது ஏழை நாடு­க­ளாக இருந்­த­தால், வரிச் சலு­கை­களை ஏரா­ள­மா­கப் பெற்­றன.


அப்­போது, ரஷ்­யா­வோடு, ‘பனிப்­போர்’ இருந்­த­தால், அதற்கு வெளியே இருந்த வள­ரும் நாடு­க­ளுக்கு சலு­கை­கள் வழங்கி, அமெ­ரிக்கா குஷிப்­ப­டுத்­தி­யது.அந்­நா­டு­கள், ஏற்­க­னவே பெற்­றுக் கொண்­டி­ருந்த வெளி­நாட்டு நிதி­யு­த­வி­க­ளு­டன், இத்­த­கைய சிறப்­பான கூடு­தல் கவ­னிப்­பு­களும் சேர்ந்தே கிடைத்து வந்­தன.


ஏழை நாடு­க­ளுக்கு செய்­யும் தான, தர்­மம் இது­வென, அமெ­ரிக்கா கரு­தி­ய­தால், அந்த நாடு­க­ளி­ட­மி­ருந்து பிர­தி­ப­ல­னாக எதை­யும் எதிர்­பார்க்­க­வில்லை.

வள­ரும் நாடு­கள், வளர்ந்த நாடு­க­ளாக தரம் உய­ரும்­போது, இத்­த­கைய சலு­கை­கள், மானி­யங்­கள் படிப்­ப­டி­யாக விலக்­கப்­பட்­டன.கடந்த, 1990ல் இந்த நிலை மாறத் துவங்­கி­யது. ரஷ்­யா­வு­ட­னான பனிப்­போர் ஒரு­பக்­கம் முடி­வுக்கு வந்­தது. பல வள­ரும் நாடு­கள் பலம் பெறத் துவங்­கின.
அதில் முக்­கி­ய­மா­னது சீனா. அது ஏழை நாடோ, வள­ரும் நாடோ அல்ல. வலி­மையை உயர்த்­திக்­கொள்­ளத் துவங்­கி­விட்ட நாடு. அமெ­ரிக்­கா­வுக்கே சவால் விடும் வலிமை.



இந்த நிலை­யில் தான், உரு­குவே நாட்­டில் நடை­பெற்ற காட் மாநாட்­டில், பிரச்னை வெடித்­தது.
ஏழை நாடு­கள் தம்­மி­ட­முள்ள அறி­வு­சார் சொத்­து­ரி­மை­க­ளை­யும், காப்­பு­ரி­மை­க­ளை­யும் அமெ­ரிக்­கா­வோடு பகிர்ந்து கொள்ள வேண்­டும் என, கோரிக்கை வைக்­கப்­பட்­டது. இந்த மாநாட்­டில்தான், டபிள்யூ.டி.ஓ., எனப்­படும், உலக வர்த்­தக அமைப்பு உரு­வா­னது.


அதன்­பின், 2000த்திலும், 2010த்திலும், அமெ­ரிக்­கா­வின் பலம் படிப்­ப­டி­யா­கத் தேயத் துவங்­கி­யது. அது கோரிய பல விஷ­யங்­களை, டபிள்யூ.டி.ஓ., தடை செய்­யத் துவங்­கி­யது. ஒரு­மித்த கருத்து ஏற்­பட்­டால் தான், எந்த வர்த்­தக விதி­மு­றை­யை­யும் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யும் என்­ப­தால், அந்த அமைப்­பின் மீது, அமெ­ரிக்­கா­வுக்கு கடும் எரிச்­சல் ஏற்­பட்­டது.
குறிப்­பாக, வள­ரும் நாடு­கள் என்று சொல்­லப்­படும், ‘பிரிக்ஸ்’ நாடு­கள், டபிள்யூ.டி.ஓ.,வின் விதி­மு­றை­க­ளைப் பயன்­ப­டுத்­தி,கொழுத்­து­ விட்­டன, வளர்ந்­து­விட்­டன என்று டிரம்­புக்கு செம எரிச்­சல்.


இந்­தி­யா­வையே எடுத்­துக் கொள்­ளுங்­க­ளேன். ‘பொருட்­களை வாங்­கும் சக்தி’ என்ற அள­வு­கோ­லில், உல­கி­லேயே மூன்­றா­வது பெரிய பொரு­ளா­தா­ர­மாக இருக்­கி­றோம். இதற்­கு கார­ணம், ஏற்­று­ம­தித் துறை­யில் நமக்கு கிடைத்­தி­ருக்­கும் பல்­வேறு சலு­கை­களும், மானி­யங்­களும் தான்.
உலக வர்த்­தக அமைப்­பின் விதி­மு­றை­கள், ஒரு சில எல்­லை­களை வகுத்­தி­ருக்­கின்­றன.
அதில், ஒரு நாட்­டின் தனி­ந­பர் வரு­வாய், 1,000 டால­ருக்­குக் கூடு­த­லாக, தொடர்ச்­சி­யாக மூன்­றாண்­டு­க­ளுக்கு மேல் இருந்து, அந்த நாட்­டில் ஒரு குறிப்­பிட்ட துறை­யில் செய்­யப்­படும் ஏற்­று­ம­தி­கள், சர்­வ­தேச ஏற்­று­ம­தி­களில், 3.25 சத­வீ­தத்­துக்­கும் மேல் இருக்­கு­மா­னால், அந்த நாடு, ஏற்­று­மதி மானி­யங்­களை வழங்­கக்­கூ­டாது என்­பது முக்­கி­ய­மா­னது.


இந்த எல்­லையை நாம், 2015லேயே தொட்­டு­விட்­டோம் என, தெரி­விக்­கிறது, சர்­வ­தேச நிதி ஆணை­யம். ஆனா­லும், இந்­தியா தொடர்ந்து இப்­போ­தும், பல்­வேறு துறை ஏற்­று­ம­தி­க­ளுக்கு மானி­யங்­க­ளை­யும், சலு­கை­க­ளை­யும் வழங்­கிக்­கொண்­டி­ருக்­கிறது.இந்த விதி, உலக வர்த்­தக அமைப்­பில் உரு­வாக்­கப்­பட்ட போது, அப்­போதே இந்த எல்­லை­யைக் கடந்த நாடு­க­ளுக்கு, மேலும், 8 ஆண்­டு­கள் வரை கால அவ­கா­சம் தரப்­பட்­டது.


அது­போல், இந்­தி­யா­வுக்­கும் தர வேண்­டும் என, வாதிட்­டார், வர்த்­த­கத்துறை அமைச்­ச­ரான சுரேஷ் பிரபு.மருந்து துறை அடுத்த உறுத்­தல். அமெ­ரிக்க மருந்து நிறு­வ­னங்­க­ளின் ஒரு சில மருந்­து­க­ளின் காப்­பு­ரிமை காலா­வ­தி­யா­கி விட்­டால், அதை
இந்­திய நிறு­வ­னங்­கள் வேறு வித­மா­க தயா­ரித்­துக் கொள்­ள­லாம் என, அனு­மதி வழங்­கப்­பட்­டு இ­ருக்­கிறது. ஆனால், இந்­திய மருந்­து­க­ளின் காப்­பு­ரி­மையை, இது­போல் நாம் அவர்­க­ளுக்கு விட்­டுக் கொடுப்­ப­தில்லை.


மூன்­றா­வது, ஆட்­டோ­மொ­பைல் துறை. அமெ­ரிக்க சந்­தை­யில், நம் இந்­திய கார்­களை எந்­த­
வி­த­மான கூடு­தல் வரி­களும் இல்­லா­மல் விற்­பனை செய்­கி­றோம். ஆனால், அங்­கே­யி­ருந்து இங்கே வரும், ‘ஹார்லி டேவிட்­சன்’ போன்ற இரு­சக்­கர வாக­னங்­க­ளுக்­கும், வெளி­நாட்டு கார்­க­ளுக்­கும் கூடு­தல் வரி வசூ­லிக்­கப்­ப­டு­கிறது.


இவை தான், டொனால்டு டிரம்ப் கண்ணை உறுத்­து­கிறது. வளர்ந்த பின்­ன­ரும், இந்­தி
­யா­வும், சீனா­வும் இன்­னும் ஏற்­று­ம­தி­க­ளுக்கு ஏன் மானி­யங்­களும், சலு­கை­களும் வழங்­கு­கின்­றன என்­பதே அவரது கேள்வி.அவர் வரைக்­கும் அவர் கேள்வி சரி. ஆனால்,
இந்­தி­யா­வில் இப்­போது தான் வாய்ப்­பு­களை சரி­யா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. சலு­கை­களும், மானி­யங்­களும் தொடர்ந்­தால் தான், இந்த வளர்ச்சி உறு­திப்­படும்; நீடித்­தி­ருக்­கும்.


தனக்­குப் போட்­டி­யாகஇந்­தி­யா­வும், சீனா­வும் தலை­யெ­டுக்­கின்­றன என்­ப­தால் தான், டபிள்யூ.டி.ஓ.,வை வைத்து, நம்மை மட்­டம் தட்­டப்பார்க்­கி­றார் டிரம்ப். அதற்கு இடம் தரா­மல், நம் வளர்ச்­சியை நாம் மேம்­ப­டுத்­திக் கொள்­வதே சரி­யான அணு­கு­முறை.


ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)