பதிவு செய்த நாள்
12 செப்2018
00:25
புதுடில்லி:பங்குச்
சந்தை பட்டியலில் இடம் பெறாத, பொது நிறுவனங்கள், அக்., 2 முதல்,
‘டீமேட்’ எனப்படும், மின்னணு பங்குகளைத் தான் வெளியிட வேண்டும் என,
மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
நிறுவனங்கள் சட்டப்படி, 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டவை, பொது நிறுவனங்களாக கருதப்படும். இவை, கார்ப்பரேட் நிறுவன நிர்வாக நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.பங்குச்
சந்தை பட்டியலில் இடம் பெறாத இந்நிறுவனங்கள்,
முதலீட்டாளர்களுக்கு, பாரம்பரிய வழியில், காகித வடிவில்
பங்குகளை வழங்குகின்றன.
இந்த ஆவணங்கள் காணாமல் போகவும், பழையதாகி, கிழியவும் வாய்ப்புள்ளது.இதனால், பங்கு முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, அக்., 2 முதல், கணினி வாயிலான டீமேட் மின்னணு பங்கு நடைமுறைக்கு மாற வேண்டும். பங்கு வெளியீடு, பிறருக்கு பங்குகளை மாற்றுவது ஆகிய அனைத்து நடைமுறைகளும், டீமேட் கணக்கின் கீழ் மட்டுமே நடைபெற வேண்டும் என, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதன் மூலம், பங்கு பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். மேலும், ‘பினாமி’
மற்றும் பின்தேதியிட்ட பங்கு வெளியீடு போன்ற மோசடிகள் முடிவிற்கு வரும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|