பதிவு செய்த நாள்
13 செப்2018
00:24
புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதம், நாட்டின் ஏற்றுமதி, 2,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர், ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள விபரம்:நாட்டின்
ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்டில், ஏற்றுமதி,
19.21 சதவீதம் உயர்ந்து, 2,784 கோடி டாலராக உயர்ந்துள்ளது.பெட்ரோலியப் பொருட்கள் தவிர்த்த ஏற்றுமதி, 17.43 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே மாதத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், இறக்குமதி, 25.41 சதவீதம் அதிகரித்து, 4,524 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதனால், வர்த்தகப் பற்றாக்குறை, 1,740 கோடி டாலராக அதிகரித்துள்ளது.எனினும், முந்தைய ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, ஆகஸ்டில், வர்த்தகப் பற்றாக்குறை, 62 கோடி டாலர் குறைந்துள்ளது.நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், ஏப்., – ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், ஏற்றுமதி, 16.13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதே காலத்தில், இறக்குமதி வளர்ச்சி, 17.34 சதவீதமாக இருந்தது.இவ்வாறு, அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|