பதிவு செய்த நாள்
13 செப்2018
00:32
மும்பை:‘‘வங்கிகள், கடன் வழங்குவதில்
முழுக்க முழுக்க, கணினி தொழில்நுட்பத்தை மட்டும்
சார்ந்திருக்காமல், மனித உழைப்பையும் பயன்படுத்த வேண்டும்,’’ என,
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி எச்சரித்துள்ளது
மும்பையில், பேங்க் பஜார் நிறுவனத்தின் கருத்தரங்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் செயல்
இயக்குனர், அனுப் பக்சி பேசியதாவது:வங்கிகள், ‘சிபில்’ எனப்படும், கடன் தகுதி மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் கடன் வழங்குகின்றன.தற்போது, ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று பல
நிறுவனங்கள், நிதிச் சேவைகளை வழங்கத் துவங்கியுள்ளன.
கணினி மோசடி
இது
போன்ற நிறுவனங்கள், ஒருவரின் கடன் தகுதியை விரைந்து பரிசீலித்து,
அவருக்கு கடன் வழங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்கின்றன.இந்நிறுவனங்கள்,
கடன் கோருவோர் குறித்த மதிப்பீட்டை, சிபில் அறிக்கை மற்றும் இதர வலைதள
விபரங்களை பார்த்து, கடன் வழங்குகின்றன.
இத்தகைய வலைதள
ஆவணங்களுடன், மனித உழைப்பையும் பயன்படுத்தி, கடன் கோருபவர்
தொடர்பான விபரங்கள் சரியானவையா என்பதை அறிவது அவசியம்.தற்போது, கணினி ஒருங்கிணைப்பிற்குள் புகுந்து, தகவல்களை திருடுவது மற்றும் பண மோசடியில் ஈடுபடும்
சம்பவங்கள் அதிகரித்துஉள்ளன.
அதனால், ஒருவரின் கடன் தகுதியை உடனடியாக
அறிய, சிபில் அறிக்கை மற்றும் சமூக வலைதளங்கள் உதவியை மட்டும்
நாடுவது சரியாக இருக்காது. இந்த ஆய்வில், நிதி நிறுவனங்கள்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மின்னணு ஆவணம்
சிபில் அறிக்கை மட்டுமின்றி,
ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் தன்விபரக்
குறிப்புகளிலும், கடன் பெறும் நோக்கத்துடன், தில்லுமுல்லு செய்ய
வாய்ப்புள்ளது.
அதனால், கணினி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் தகவல்களை சரிபார்ப்பதுடன், பிற
வழிகளிலும், கடனுக்கு விண்ணப்பித்தோரின் தகுதியை ஆராய வேண்டும்.வங்கிகளும், நிதி
நிறுவனங்களும், இதர ஆவணங்களுடன், ஒருவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கையும், ஆய்வு செய்கின்றன.
கடனுக்கு பிணையாக வழங்கும் பங்குகள், தற்போது மின்னணு ஆவண வடிவில், ‘டீமேட்’ கணக்கில் பராமரிக்கப்படுகின்றன. அதுபோல, கடன் பத்திரங்கள், மியூச்சுவல்
பண்டு முதலீடுகள் ஆகியவற்றையும், மின்னணு ஆவணங்களாக பாதுகாக்கும் வசதி உள்ளது.அதனால், கடன் அளிக்கும் போது, இத்தகைய மின்னணு பிணைப் பத்திரங்களை பெரிதும் சார்ந்து இருக்கும் நிலை உள்ளது.
இருந்தபோதிலும்,
கடன் கொடுப்பதில், அனைத்து அம்சங்களையும் சீர்துாக்கி பார்க்கும்
அதிகாரிகளின் பங்களிப்புக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பல மாநிலங்கள், நில விபரங்களை, மின்னணு வடிவிற்கு மாற்றி வருகின்றன.
இணையம் மூலம் பத்திரப் பதிவு, பட்டா மாற்றம் மேற்கொள்ளும்
வசதிகள்
அறிமுகமாகியுள்ளன. இதனால், நிதி நிறுவனங்கள், ஒருவரின்
தகுதியை சுலபமாக சீர்துாக்கி பார்த்து, கடன் வழங்க முடியும்.
– அனுப் பக்சி, செயல் இயக்குனர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|