பதிவு செய்த நாள்
14 செப்2018
00:45
புதுடில்லி:டில்லியில்,
சில தினங்களுக்கு முன், ஓட்டுனர் உரிமம், ‘இ – விசா, இ –
பாஸ்போர்ட்’ உள்ளிட்ட, 40 சேவைகளை வீட்டில் இருந்தபடி பெறும், ‘வீடு
தேடி வரும் சேவை’ திட்டம்
அறிமுகமானது.
பெரும் வரவேற்பை
பெற்றுள்ள இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை, வி.எப்.எஸ்.,
குளோபல் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்நிறுவனம், உலகளவில் விசா
வசதிகளை வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது.இந்நிறுவனத்தின், ஐ.சி.எஸ்., பிரிவின், தெற்காசிய மண்டல தலைவர் தெப்குமார் பண்டோபாத்யா கூறியதாவது:
அரசுக்கும்,
மக்களுக்கும் இடையே பாலமாக, நிறுவனத்தின் சேவை இருக்கும். திருமண
சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உட்பட, அரசு சார்ந்த, 40 சேவைகளை,
வீட்டிலேயே பெறலாம். இதற்காக நிறுவனம், பிரத்யேக, ‘ஆப்’ ஐ
உருவாக்கியுள்ளது. சேவை விரும்புவோரின் தொலைபேசி அழைப்பு, ‘கால்
சென்டர்’ மூலம், நிறுவனத்திற்கு வரும்.
உடனே, அப்பகுதியில்
உள்ள, எங்கள் முகவர், அழைப்பு விடுத்தவர் வீட்டிற்கு சென்று,
ஆவணங்களை, ‘ஸ்கேன்’ செய்து, அதற்கான அத்தாட்சியை வழங்குவார். அதன்
பின், அரசு துறைகள் மூலம், உரிய சான்றிதழ்கள், ‘கூரியர்’ மூலம்
வீட்டிற்கு அனுப்பப்படும்.ஒரு சேவைக்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|