பதிவு செய்த நாள்
14 செப்2018
00:47
புதுடில்லி:ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக, 2015ல், கே.வி.சவுத்ரி பொறுப்பேற்றது முதல், மாதந்தோறும், பல்வேறு தலைப்புகளில், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.
இவற்றில்,
'நிடிஆயோக்' தலைவர் அமிதாப் காந்த், தனி நபர் அடையாள ஆணைய தலைவர்,
அஜய் பூஷன் பாண்டே, வங்கிகள் வாரியத்தின் முன்னாள் தலைவர், வினோத்
ராய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இந்த வகையில், 20ம் தேதி,
டில்லியில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள
கருத்தரங்கில், உர்ஜித் படேல் உரையாற்ற உள்ளார்.
அவர், வங்கி
மற்றும் நிதித் துறைகளில் நிலவும் லஞ்ச ஊழல் பிரச்னைகள் குறித்தும்,
அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் உரையாற்றுவார்.
இக்கருத்தரங்கில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், வங்கி
மற்றும் பொதுத் துறை நிறுவன உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த, 2016, ஆகஸ்ட், 20ல் ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் பொறுப்பேற்ற பின், முதன் முறையாக, மத்திய அரசு உயரதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|