பதிவு செய்த நாள்
14 செப்2018
00:56
மும்பை:'நடப்பு
நிதியாண்டில், இந்திய ஜவுளி துறை வளர்ச்சி, நிலையாக இருக்கும்' என,
தர நிர்ணய நிறுவனமான, 'இந்தியா ரேட்டிங்ஸ்' தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நடப்பு,
2018- – 19ம் நிதியாண்டில், எஞ்சிய ஏழு மாதங்களில், ஜவுளி துறை
வளர்ச்சி, நிலைத்திருக்கும். குறிப்பாக, பருத்தி மற்றும் செயற்கை
ஜவுளி பிரிவு வளர்ச்சி, ஸ்திரமாக இருக்கும்.தனியார் துறையில்
நுகர்வு அதிகரித்து வருவதால், உள்நாட்டில், ஜவுளிக்கான தேவை
பெருகும். அதுபோல, ஜவுளி ஏற்றுமதியும் அதிகரிக்கும். குறிப்பாக,
ரூபாய் மதிப்பு சரிவால், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் அதிகம்
பயனடைவர்.
ரூபாய் மதிப்பு
இந்தாண்டு, ஏப்., – ஆகஸ்ட் வரை,
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி
செய்யும் பிற நாடுகளின் கரன்சி மதிப்பை விட, சரிவடைந்துள்ளது.
இதனால், அந்நாடுகளை விட, அதிக ஆதாயம் கிடைக்கும் இந்திய ஜவுளிகளை
இறக்குமதி செய்யவே, அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்பும்.
இது,
சர்வதேச ஜவுளி சந்தையில், இந்திய ஜவுளிகளுக்கு அதிக போட்டியை
ஏற்படுத்தி, அவற்றின் ஏற்றுமதி உயர வழி வகை செய்யும்.உள்நாட்டில், ஜவுளிகளுக்கான தேவை உயர்ந்து வருகிறது. இதனால்,மூலப்
பொருட்களின் கொள்முதல் செலவில் ஏற்பட்டுள்ள உயர்வை, விற்பனை
விலையில் ஈடு செய்யும் வாய்ப்பும், ஜவுளி துறைக்கு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக, ஜவுளி துறையின் லாப வரம்பும் உயரும்.
இது, மூலப்
பொருட்கள் விலை உயர்வு, கடன் போன்றவற்றால், நடைமுறை மூலதனத் தேவையை
சமாளிக்க திணறி வரும், ஜவுளி துறையினருக்கு சாதகமான அம்சமாகும்.
பருத்தி
இம்மாதம்
முடியும், 2017-–18ம் பருத்தி பருவத்தில், எதிர்பார்த்ததை விட,
பருத்தி உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. பருத்தி பயிர்
பரப்பு குறைவால், வரும் பருவத்திலும் அதன் உற்பத்தி குறைய
வாய்ப்புள்ளது.அதேசமயம், உள்நாட்டில், பருத்தி தேவை அதிகமாக
இருக்கும். சீனாவிற்கு அதிக அளவில் பருத்தி ஏற்றுமதியாகும். இதன்
காரணமாக, பருத்தி
கையிருப்பு குறையும்.
இந்நிலையில், நடப்பு,
2018-–19ம் பருத்தி பருவத்திற்கான குறைந்த பட்ச ஆதார விலை
உயர்த்தப்படும் என்பதால், பருத்தி விலை உயரும். இதன் காரணமாக,
செயற்கை நுாலிழை ஜவுளி வகைகள் விற்பனை அதிகரித்து, அப்பிரிவின் லாப
வரம்பு கூடும்.
செயற்கை நுாலிழை ஜவுளி உற்பத்திக்கு, 7 சதவீத
உள்ளீட்டு வரிப் பயன் அளிக்கும் அரசு திட்டமும் முடிவும்,
இத்துறைக்கு சாதகமாக இருக்கும். இதனால், ஆயத்த ஆடை
உற்பத்தியாளர்களின் மூலப்பொருட்கள் செலவினம் குறைந்து, அவர்கள்
அதிக அளவில் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏறுமுகம்
கடந்த
ஜூலையில், நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி, 15 சதவீதம்
அதிகரித்து, 10,879 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு,
இதே மாதத்தில், 9,429 கோடி ரூபாயாக
இருந்தது.இதே காலத்தில்,
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,263 கோடியில்
இருந்து, 8,757 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|