பதிவு செய்த நாள்
14 செப்2018
11:31
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடுமையாக சரிந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்றைய (செப்.,14) வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்ந்து 71.68 ஆக உள்ளது.
சர்வதேச சந்தையில் இறக்குமதியாளர்களும் வங்கிகளும் டாலரை அதிகம் விற்றதன் காரணமாக மற்ற நாடுகளின் நாணயங்கள், ரூபாயை ஆதரித்தன. இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி இருப்பதும் ரூபாய் மதிப்பின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. முன்னதாக செப்.,12 ம் தேதி வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 72.18 ஆக இருந்தது.
மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 6.6 சதவீதம் துயர்ந்துள்ளது. இதே போன்று கடந்த 10 மாதங்களாக சரிந்து வந்த சில்லறை விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் சீரடைந்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீள்வதற்கு காரணமாக அமைந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|