பதிவு செய்த நாள்
15 செப்2018
00:06
நெல்லிக்குப்பம்:‘‘தமிழகத்தில்,
சர்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்க அனுமதியளித்தால் மட்டுமே
ஆலைகளையும், கரும்பு விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்,’’ என,
இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய தலைவர், விருத்தகிரி
கூறினார்.
பிரேசில்
தமிழகத்தில், 25க்கும் மேற்பட்ட தனியார்
மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் ஒரு கூட்டுறவு,
எட்டு தனியார் ஆலைகளில் மட்டுமே எத்தனால் தயாரிக்கும் வசதி உள்ளது.உலகிலேயே
சர்க்கரை அதிகம் உற்பத்தியாகும் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை
குறைந்தால், சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனால்
தயாரிக்கப்படுகிறது.
இதனால், அங்கு ஆலைகளும், கரும்பு விவசாயிகளும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஆனால்
இந்தியாவில், ஒவ்வொரு ஆலையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எத்தனால்
தயாரிக்க, அரசு அனுமதியளிக்கிறது. இதனால், சர்க்கரை விலை
குறைந்தாலும், வேறு வழியின்றி சர்க்கரையை உற்பத்தி செய்ய வேண்டிய
நிலை உள்ளது.இது குறித்து, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய தலைவர், விருத்தகிரி கூறியதாவது:
இந்தியாவில் சர்க்கரை தேவை, 225 லட்சம் டன். ஆனால், நடப்பு ஆண்டு உற்பத்தி, 350 லட்சம்
டன்னாக உள்ளது.அதேபோன்று
அவசர தேவைக்காக கடந்த ஆண்டு, 40 லட்சம் டன் சர்க்கரை, ஆலைகளில்
கட்டாய இருப்பில் உள்ளது. நடப்பு ஆண்டு, 165 லட்சம் டன் சர்க்கரை
அதிகப்படியாக கையிருப்பில் உள்ளது.
விவசாயிகள்
இந்தியாவில்
பெட்ரோலுடன், 10 சதவீத எத்தனால் மட்டுமே சேர்க்க வேண்டுமென, விதி
உள்ளது. ஆனால், தற்போது பயன்பாட்டில் உள்ள வாகன இயந்திரங்களில், 25
சதவீத எத்தனால் கலந்து பயன்படுத்த முடியும். மத்திய அரசு இதற்கான
சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் எத்தனால்
தயாரிக்க அனுமதித்தால், அதிகப்படியான சர்க்கரை இருப்பில் உள்ள
இந்த நேரத்தில், சர்க்கரை உற்பத்தி செய்யாமல், நேரடியாக எத்தனால்
தயாரிப்பர்.
எத்தனால் தயாரிக்க அனுமதியளித்தால் மட்டுமே,
தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளையும், கரும்பு விவசாயிகளையும்
காப்பாற்ற முடியும்.இவ்வாறு விருத்தகிரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|