காஸ் சிலிண்டரில் ‘அயர்ன் பாக்ஸ்’ காஸ் சிலிண்டரில் ‘அயர்ன் பாக்ஸ்’ ...  டாலர் மதிப்பு உயர்வால் இறக்குமதியாளர் தவிப்பு டாலர் மதிப்பு உயர்வால் இறக்குமதியாளர் தவிப்பு ...
எத்தனால் தயாரிப்புக்கு அனுமதி வழங்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
00:06

நெல்லிக்குப்பம்:‘‘தமி­ழ­கத்­தில், சர்க்­கரை ஆலை­களில் எத்­த­னால் தயா­ரிக்க அனு­ம­தி­ய­ளித்­தால் மட்­டுமே ஆலை­க­ளை­யும், கரும்பு விவ­சா­யி­க­ளை­யும் காப்­பாற்ற முடி­யும்,’’ என, இந்­திய விவ­சாய சங்­கங்­களின் கூட்­ட­மைப்பு தேசிய தலை­வர், விருத்­த­கிரி கூறி­னார்.


பிரேசில்


தமி­ழ­கத்­தில், 25க்கும் மேற்­பட்ட தனி­யார் மற்­றும் கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­கள் உள்ளன. இதில் ஒரு கூட்­டு­றவு, எட்டு தனி­யார் ஆலை­களில் மட்­டுமே எத்­த­னால் தயா­ரிக்­கும் வசதி உள்­ளது.உல­கி­லேயே சர்க்­கரை அதி­கம் உற்­பத்­தி­யா­கும் பிரே­சில் நாட்­டில் சர்க்­கரை விலை குறைந்­தால், சர்க்­கரை உற்­பத்தி செய்­யா­மல் நேர­டி­யாக எத்­த­னால் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.
இத­னால், அங்கு ஆலை­களும், கரும்பு விவ­சா­யி­களும் நல்ல நிலை­யில் உள்­ள­னர்.


ஆனால் இந்­தி­யா­வில், ஒவ்­வொரு ஆலை­யும் குறிப்­பிட்ட அளவு மட்­டுமே எத்­த­னால் தயா­ரிக்க, அரசு அனு­ம­தி­ய­ளிக்­கிறது. இத­னால், சர்க்­கரை விலை குறைந்­தா­லும், வேறு வழி­யின்றி சர்க்­க­ரையை உற்­பத்தி செய்ய வேண்­டிய நிலை­ உள்­ள­து.இது குறித்து, இந்­திய விவ­சாய சங்­கங்­களின் கூட்­ட­மைப்பு தேசிய தலை­வர், விருத்­த­கிரி கூறி­ய­தா­வது:


இந்­தி­யா­வில் சர்க்­கரை தேவை, 225 லட்­சம் டன். ஆனால், நடப்பு ஆண்டு உற்­பத்தி, 350 லட்சம்
டன்­னாக உள்­ளது.அதே­போன்று அவ­சர தேவைக்­காக கடந்த ஆண்டு, 40 லட்­சம் டன் சர்க்­கரை, ஆலை­களில் கட்­டாய இருப்­பில் உள்­ளது. நடப்பு ஆண்டு, 165 லட்­சம் டன் சர்க்­கரை அதி­கப்­ப­டி­யாக கையி­ருப்­பில் உள்­ளது.


விவசாயிகள்


இந்­தி­யா­வில் பெட்­ரோ­லு­டன், 10 சத­வீத எத்­த­னால் மட்­டுமே சேர்க்க வேண்­டு­மென, விதி உள்­ளது. ஆனால், தற்­போது பயன்­பாட்­டில் உள்ள வாகன இயந்­தி­ரங்­களில், 25 சத­வீத எத்­த­னால் கலந்து பயன்­ப­டுத்த முடி­யும். மத்­திய அரசு இதற்­கான சட்ட திருத்­தம் கொண்டு வர வேண்­டும்.
தமி­ழ­கத்­தில் எத்­த­னால் தயா­ரிக்க அனு­ம­தித்­தால், அதி­கப்­ப­டி­யான சர்க்­கரை இருப்­பில் உள்ள இந்த நேரத்­தில், சர்க்­கரை உற்­பத்தி செய்­யா­மல், நேர­டி­யாக எத்­த­னால் தயா­ரிப்­பர்.


எத்­த­னால் தயா­ரிக்க அனு­ம­தி­ய­ளித்­தால் மட்­டுமே, தமி­ழ­கத்­தில் சர்க்­கரை ஆலை­க­ளை­யும், கரும்பு விவ­சா­யி­க­ளை­யும் காப்­பாற்ற முடி­யும்.இவ்­வாறு விருத்­த­கிரி கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)