பதிவு செய்த நாள்
16 செப்2018
23:59
இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு தொடர்பாக மத்திய அரசோ, ரிசர்வ வங்கியோ உடனடியாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை என, நிதி அமைச்சகத்திற்கான முதன்மை பொருளாதார ஆலோசகர், சஞ்சய் சன்யால் கூறியுள்ளார்.
இந்திய பொருளாதார நிலை குறித்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற முதன்மை பொருளாதார ஆலோசகர், சஞ்சய் சன்யால் கூறியதாவது: வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டுமா எனும் கேள்வி கேட்கப்படுகிறது. இந்த கட்டத்தில் இது தேவையில்லாதது என, கருதுகிறேன். ஐந்து ஆண்டுகளில், டாலர் தவிர மற்ற சர்வதேச நாணயங்களுக்கு எதிராக ரூபாய் நிலையாக உள்ளது.
இப்போதைக்கு தலையிடும் தேவை இல்லை. ரூபாயின் மதிப்பு, மிக விரைவாக, மிக அதிகம் சரிந்தால் இந்த போக்கில் தலையிடும் அவசியம் பற்றி பரிசீலிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|