நேரடி வரி வசூல் இலக்கு  ரூ.11.50 லட்சம் கோடிநேரடி வரி வசூல் இலக்கு ரூ.11.50 லட்சம் கோடி ... புரட்டாசி மாத விரதம்; முட்டை நுகர்வு சரிவு புரட்டாசி மாத விரதம்; முட்டை நுகர்வு சரிவு ...
பொது துறையை விஞ்சிய, தனியார் வங்கிகள் குறு, சிறு, நடுத்தர நிறுவன கடன் வளர்ச்சியில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2018
23:25

மும்பை: குறு,சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்­கு­வ­தில், பொது துறையை விட, தனி­யார் துறை வங்­கி­கள் மற்­றும் வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களின் சந்­தைப் பங்கு, அதி­க­ரித்து வரு­வது ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

இது குறித்து, ‘டிரான்ஸ்­யூ­னி­யன் சிபில் மற்­றும் சிட்பி’ வெளி­யிட்ட ஆய்­வ­றிக்கை: இந்­தாண்டு, ஜூன் நில­வ­ரப்­படி, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கிய கட­னில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, 21 வங்­கி­களின் பங்கு, 50.7 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, 2017, ஜூனில், 55.8 சத­வீ­த­மாக உயர்ந்து இருந்­தது. இதே காலத்­தில், குறு, சிறு, நிறு­வ­னங்­கள் பிரி­வின் ஒட்­டு­மொத்த கடன் வளர்ச்சி, 16.1 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.

வாராக் கடன் :
பொதுத் துறை வங்­கி­களின், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பிரி­வின் கடன் வளர்ச்சி, 5.5 சத­வீ­த­மாக உள்­ளது. இது, தனி­யார் நிதித் துறை­யில், 23.4 சத­வீ­த­மாக உயர்ந்­து­இருக்­கிறது. இதே காலத்­தில், குறு,சிறு,நடுத்­தர நிறு­வ­னங்­கள் கடன் பிரி­வில், தனி­யார் துறை வங்­கி­களின் சந்­தைப் பங்கு, 28.1 சத­வீ­தத்­தில் இருந்து, 29.9 சத­வீ­த­மாக அதி­க­ரித்­து உள்­ளது.

வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களின், சந்­தைப் பங்­க­ளிப்பு, 9.6 சத­வீ­தத்­தில் இருந்து, 11.3 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. கடந்த ஜூன் மாத நில­வ­ரப்­படி, பொதுத் துறை வங்­கி­கள், குறு,சிறு,நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கிய கட­னில், வாராக் கடன் அளவு, 15.2 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, 2017, ஜூன் மாதத்­தில், 14.5 சத­வீ­த­மாக இருந்­தது.

அதே­நே­ரத்­தில், இதே காலத்­தில், தனி­யார் துறை வங்­கி­கள், குறு,சிறு,நடுத்­தர நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து வசூ­லிக்க வேண்­டிய வாராக் கடன், 4 சத­வீ­தத்­தில் இருந்து, 3.9 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.

பரிசீலனை காலம் :
பொதுத் துறை வங்­கி­கள், குறு,சிறு,நடுத்­தர நிறு­வ­னங்­களின் கடன் விண்­ணப்­பங்­களின் பரி­சீ­லனை காலத்தை, 41 நாட்­களில் இருந்து, 31 நாட்­க­ளாக குறைத்­துள்ளன. அதே­நே­ரத்­தில், தனி­யார் வங்­கி­கள், இந்த பரி­சீ­ல­னைக் காலத்தை, 24 நாட்­களில் இருந்து, 18 நாட்­க­ளாக குறைத்­துள்ளன. எனி­னும், குறுங்­க­டன்­க­ளுக்­கான பரி­சீ­லனை காலம் தான் அதி­கம் குறைந்­துள்­ளதே தவிர, பெருங் கடன்­கள் பிரி­வில் பெரிய முன்­னேற்­றம் இல்லை.

அமைப்பு சார்ந்த கடன் துறை­யில், கடந்த, ஜூன் நில­வ­ரப்­படி, ஒட்­டு­மொத்த கடன் நிலுவை, 101 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது. இதில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் பங்கு, 22.80 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது. பெரிய மற்­றும் நடுத்­த­ர­மான கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் கடன் நிலுவை, 42.80 லட்­சம் கோடி ரூபாய் என்ற அள­வில் காணப்­ப­டு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

ஒட்­டு­மொத்த அள­வில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை­யின் கடன் வளர்ச்சி நன்கு உள்­ளது. இது, மின்­னணு தொழில்­நுட்­பம் வேக­மாக பரவி வரு­வ­தன் தாக்­கம் என­லாம். இந்த வளர்ச்சி, கடன் வழங்­கு­வ­தில், நிதிச் சந்தை வலுப்­பெற்று வரு­வ­தை­யும் குறிக்­கிறது.
–முக­மது முஸ்­தபா, தலை­வைர், சிட்பி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)