பதிவு செய்த நாள்
19 செப்2018
23:31
புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், மெக்சிகோவில் அதன் தயாரிப்புகளை சந்தைப்படுத்த, டொரினோ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது.
இது குறித்து, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின், பன்னாட்டு வணிகப் பிரிவின் முதுநிலை துணை தலைவர், ஆர்.பிலிப் கூறியதாவது: மெக்சிகோவில், முன்னணி வாகன விற்பனையாளராக டொரினோ மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்துடனான கூட்டின் மூலம், மெக்சிகோவில் எங்கள் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை வலுப்பெறும்.
எங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, முதல் ஆண்டில், 40 பிரத்யேக ஸ்டோர்களை டொரினோ நிறுவனம் துவக்க இருக்கிறது. இந்த ஸ்டோர்கள் மூலம், இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படும். டொரினோ உடனான கூட்டின் மூலம், அங்குள்ள வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இரு நிறுவனங்களின் கூட்டு குறித்து, டொரினோவின் தலைமை செயல் அதிகாரி, ஜார்ஜ் கார்சியா கூறியதாவது: டி.வி.எஸ்., நிறுவன தயாரிப்புகள், மெக்சிகோ வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏற்றவையாக உள்ளன. இந்த கூட்டு மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் என, உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
டி.வி.எஸ்., நிறுவனம் முதற்கட்டமாக, அப்பாச்சி ஆர்.டி.ஆர்., வீகோ ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகனங்களை மெக்சிகோவில் அறிமுகம் செய்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|