பதிவு செய்த நாள்
19 செப்2018
23:35
ஹங்சூ : ‘‘அமெரிக்கா – சீனா இடையே துவங்கியுள்ள வர்த்தகப் போர், 20 ஆண்டுகளுக்கு நீடிக்கும்,’’ என, அலிபாபா நிறுவனர் ஜாக் மா எச்சரித்துள்ளார்.
நேற்று முன்தினம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘‘அமெரிக்கா இறக்குமதி செய்யும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களின் வரி உயர்த்தப்படுகிறது. இதற்கு சீனா பதிலடி கொடுத்தால், மேலும் பல பொருட்களின் வரி உயரும்,’’ என, எச்சரித்தார்.
இது குறித்து, சீனாவின், நம்பர் – 1 பணக்காரரான, ஜாக் மா கூறியதாவது: அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர், குறுகிய காலத்தில் முடிவடையாது. டிரம்ப் ஆட்சி காலத்திற்குப் பின்னும், 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதனால், சீனா, வர்த்தக உறவை, தெற்காசியா மற்றும் ஆப்ரிக்க பிராந்தியத்திற்கு மாற்ற வேண்டும்.
அமெரிக்காவின் மொத்த விலை வணிகர்கள், சீனப் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். இந்த வர்த்தகப் போரால், அலிபாபா நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல நிறுவனங்களுக்கு, இதுவரை இல்லாத வர்த்தக வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. இந்த சவாலை, அலிபாபா சமாளித்து வளரா விட்டால், எந்த சீன நிறுவனமும் வளராது என, 100 சதவீதம் உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|