பதிவு செய்த நாள்
19 செப்2018
23:36
சென்னை : ‘‘மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் முக்கிய சந்தையாக தமிழகம் திகழ்கிறது,’’ என, இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, பிரோஜ்ஷா சர்காரி தெரிவித்தார்.
இது குறித்து, அவர் சென்னையில் நேற்று கூறியதாவது: இந்தியாவில், மூன்றாம் தரப்பு போக்குவரத்து தளவாடங்களை வழங்கும் நிறுவனங்களில், ‘மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ்’ முன்னோடியாக திகழ்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் மஹிந்திராவின் செயல்பாடுகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், எங்கள் நிறுவன வளர்ச்சிக்கு, தமிழகத்தை ஒரு முக்கிய பங்காக கருதுகிறோம்.
தமிழகம், தொழில் துறை மற்றும் வர்த்தக மையமாக திகழ்கிறது. மேலும், வாகன துறையில் மிகப்பெரிய வளர்ச்சி உருவாகி வருகிறது. இது, எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். எனவே, எங்கள் நிறுவனத்துக்கு, தமிழகம் முக்கிய சந்தையாக திகழ்கிறது. இவ்வாறு சர்காரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|