பதிவு செய்த நாள்
19 செப்2018
23:37
நாமக்கல் : ‘கொள்முதல் விலையில் இருந்து, 25 காசுகள் மட்டுமே குறைத்து விற்பனை செய்ய வேண்டும். இதற்கு பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, ‘நெக்’ நாமக்கல் மண்டலத் தலைவர், செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில், 1,200 கோழிப் பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம், தினமும், 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை விலை நிர்ணயம் என்பது, மற்ற மாநிலங்களில் உள்ள முட்டை தேவை, தமிழகம், கேரளத்தில் உள்ள தட்ப வெப்பநிலை, திருவிழா உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நெக் நிர்ணயம் செய்யும் விலையை காட்டிலும், 60 முதல், 70 காசுகள் வரை, குறைத்து, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தனர். அதனால், பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவற்றை கருத்தில் கொண்டு, ‘இனி, கொள்முதல் விலையில் இருந்து, 25 காசுகள் மட்டுமே குறைத்து விற்பனை செய்ய வேண்டும்’ என, பண்ணையாளர்களுக்கு, நெக் தலைவர், செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|