அவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு; விரைவில் சுங்க வரி உயர்வு அறிவிப்பு வெளியாகிறதுஅவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு; விரைவில் சுங்க வரி ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு ...
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2018
10:36

புதுடில்லி : சிறு மேசிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் தொழிலாளர் சேமநல நிதியும் (பிபிஎப்) இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலைய சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பிபிஎப் ஆகியன ஏறக்குறைய முற்றிலும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதில், 8.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சேமிப்பு வைப்பு தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகவே இருக்கும்.

பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திர வட்டிவிகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இருப்பினும் கிஷான் விகாஸ் பத்திரம் நிறைவடையும் காலம் 112 மாதங்களுக்கு பதிலாக 111 மாதங்களாக குறைக்கப்படுகிறது.

பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)