பதிவு செய்த நாள்
20 செப்2018
23:20
புதுடில்லி : இந்தியாவில் செயல்படும், அமேசான் உள்ளிட்ட அன்னிய மின்னணு வர்த்தக நிறுவனங்கள், அனைத்து மாநிலங்களிலும், ஜி.எஸ்.டி., பதிவு செய்வதற்கான, ‘கெடு’ இம்மாதத்துடன் முடிவடைகிறது.
இந்த நடைமுறையில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, ஒரு முறை பதிவு செய்யும் சிறப்பு சலுகை வழங்கப்படும் என, அன்னிய நிறுவனங்கள் கருதின. இந்நிலையில், ‘‘மின்னணு வணிக நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., பதிவில் விலக்கு அளிக்கப்படவில்லை,’’ என, பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனத்தின் தேசிய மறைமுக வரிகள் பிரிவு தலைவர், பிரதிக் ஜெயின் தெரிவித்து உள்ளார்.
அதனால், அன்னிய மின்னணு வணிக நிறுவனங்கள், அனைத்து மாநிலங்களிலும், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, அக்., 1 முதல், அவற்றின் வலைதளங்கள் வாயிலாக பொருட்களை விற்போரிடம், வரி வசூலிக்க வேண்டும். இந்தியாவில் செயல்படும், கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட அன்னிய நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
இதன்படி, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல், வெளி மாநிலங்களில் மேற்கொள்ளும் விற்பனைக்கு, மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி.,யில், தலா, 1 சதவீத வரி வசூலிக்க வேண்டும்; இது, மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனைக்கு, 2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|