பதிவு செய்த நாள்
27 செப்2018
06:06
திருப்பூர் : காகிதம், டீசல் விலை அதிகரிப்பால், திருப்பூர்,கோவை பகுதி அட்டைப் பெட்டி உற்பத்தி துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
கோவை, திருப்பூர் பகுதிகளில், 300 அட்டைப் பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில், மாதந்தோறும், 20 ஆயிரம் டன் அட்டைப் பெட்டி தயாரிக்கப்படுகிறது. ‘கிராப்ட்’ காகிதத்தை பயன்படுத்தி, உணவுப் பொருட்கள், மோட்டார், ஆயத்த ஆடை துறையினருக்கான அனைத்து வகை அட்டைப் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உற்பத்தி மூலப்பொருளான கிராப்ட் காகிதம், சத்தியமங்கலம், திருநெல்வேலி காகித ஆலைகளில் இருந்து பெறப்படுகிறது. காகித ஆலைகள், கிராப்ட் காகிதம் விலையை உயர்த்தி வருகின்றன. சில ஆலைகள், டன்னுக்கு, 1,000 ரூபாய் என்ற அளவுக்கு காகிதம் விலையை உயர்த்திவிட்டன. மூலப்பொருள், டீசல் விலை உயர்வால், அட்டைப் பெட்டி உற்பத்தி செலவினம், 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, திருப்பூர் அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: ஆலைகள், அதிகளவு காகிதத்தை, சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதால், உள்நாட்டில் விலை உயர்ந்து வருகிறது. டீசல் விலை உயர்வால், போக்குவரத்து செலவினமும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, அட்டைப் பெட்டி உற்பத்தி துறை பாதிக்கப்படுகிறது.
செலவினம் அதிகரிப்புக்கு ஏற்ப, அட்டைப் பெட்டி விலையை உயர்த்த முடிவதில்லை. வரும், 30ம் தேதி, தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் சங்க பொதுக் குழு, திருப்பூரில் கூடுகிறது. இதில், தொழில் நெருக்கடி குறித்து விவாதித்து, தக்க முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|