பதிவு செய்த நாள்
27 செப்2018
06:07
புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைகளை நிர்வகிக்கும், ஜி.எஸ்.டி.என்., நிறுவனம், பொதுத் துறை நிறுவனமாக மாற உள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: மத்திய – மாநில அரசுகள், ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தில், 49 சதவீத பங்கு மூலதனம் வைத்துள்ளன. எச்.டி.எப்.சி., பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், என்.எஸ்.இ., ஸ்டிராடஜிக் இன்வெஸ்ட்மென்ட், எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய ஐந்து தனியார் நிறுவனங்களின் பங்கு, 51 சதவீதம் உள்ளது.
எனவே, ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தில், மத்திய – மாநில அரசுகளின் பங்கு மூலதனத்தை, 100 சதவீதமாக உயர்த்தி, பொதுத் துறை நிறுவனமாக மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, மத்திய அமைச்சரவைக் குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2013, மார்ச், 28ல், தனியார் நிறுவனமாக, ஜி.எஸ்.டி.என்., பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|